பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா | ஆர்.கோவர்த்தனம் | பட்டணத்தில் பூதம் |
Antha Sivagami Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி…
—BGM—
பெண் : அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி…
பெண் : வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி…
வேலன் இல்லாமல் தோகை ஏதடி…
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி…
வேலன் இல்லாமல் தோகை ஏதடி…
பெண் : அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி…
—BGM—
பெண் : கண்கள் சரவணன் சூடிடும் மாலை…
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை…
கண்கள் சரவணன் சூடிடும் மாலை…
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை…
பெண் : பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே…
வேலை வணங்காமல் வேறென்ன வேலை…
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே…
வேலை வணங்காமல் வேறென்ன வேலை…
பெண் : நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே…
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே…
பெண் : நிழலாடும் விழியோடும் ஆடினானே…
அன்று நிழலாடும் விழியோடும் ஆடினானே…
என்றும் கண்ணில் நின்றாட சொல்லடி…
—BGM—
ஆண் : மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்…
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்…
மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்…
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்…
பெண் : நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ…
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ…
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ…
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ…
ஆண் : காலம் மாறினால் காதலும் மாறுமோ…
காலம் மாறினால் காதலும் மாறுமோ…
பெண் : மாறாது மாறாது இறைவன் ஆணை…
ஆண் & பெண் : என்றும் மாறாது மாறாது…
இறைவன் ஆணை…
ஆண் : இந்த சிவகாமி மகனுடன்…
இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி…
இன்னும் சேரும் நாள் பார்ப்பதென்னடி…
ஆண் : வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி…
தோகை இல்லாமல் வேலன் ஏதடி…
—BGM—
பெண் : அந்த சிவகாமி மகனிடம்…
அந்த சிவகாமி மகனிடம்…
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி…
Notes : Antha Sivagami Song Lyrics in Tamil. This Song from Pattanathil Bhootham (1967). Song Lyrics penned by Kannadasan. அந்த சிவகாமி மகனிடம் பாடல் வரிகள்.