Category Archives: இருவர்

இருவர்

ஹலோ மிஸ்டர்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணி & ராஜகோபால்ஏ. ஆர். ரகுமான்இருவர்

Hello Mister Ethirkatchi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…

பெண் : காதலா காதலா உனை நான் விடமாட்டேன்…
கைத்தளம் பற்றுவேன் பிரியவிடமாட்டேன்…
கண்கள் மீனாடை அழகு மீதாணை விடவே விடமாட்டேன்…

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…

BGM

பெண் : கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால்…
உள்ளத்தில் உலகப் போர் மூளுமே…
நீயென்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால்…
என் கண்கள் பாலை வனமாகுமே…

பெண் : பருவங்கள் சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும்…
துருவங்கள் சந்தித்தால் பிரியாது எந்நாளும்…
கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்…

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…

BGM

பெண் : மண்ணை வேர்கள் பிரிந்தாலும்…
விண்ணை நீலம் பிரிந்தாலும்…
கண்ணை மணிகள் பிரிந்தாலும்…
உனை நான் பிரியேன்…

பெண் : சங்கம் தமிழைப் பிரிந்தாலும்…
சத்தம் இசையைப் பிரிந்தாலும்…
தாளம் சுருதியைப் பிரிந்தாலும்…
உனை நான் பிரியேன்…

பெண் : உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாளோ…
உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ…
உன்னைப் பார்த்த நாள்தான் பொன்னாளோ…

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…

பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…
கேள்விக்கு பதிலும் என்னாச்சு…
காத்து காத்து நாலாச்சு…
பதினெட்டு வயசாச்சு…


Notes : Hello Mister Ethirkatchi Song Lyrics in Tamil. This Song from Iruvar (1997). Song Lyrics penned by Vairamuthu. ஹலோ மிஸ்டர் பாடல் வரிகள்.


வெண்ணிலா வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஆஷா போஸ்லேஏ. ஆர். ரகுமான்இருவர்

Vennila Vennila Song Lyrics in Tamil


BGM

பெண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே…
வந்ததே முதற்காதல்…
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல்…
கண்டதும் முதற்காதல்…

பெண் : தூண்டிலில் மீனா தூயவானா…
காரணம் நானா நீயே நீயே சொல்…

பெண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே…
வந்ததே முதற்காதல்…
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல்…
கண்டதும் முதற்காதல்…

பெண் : தூண்டிலில் மீனா தூயவானா…
காரணம் நானா நீயே நீயே சொல்…

BGM

பெண் : என்னவா என்னவா…
எது கண்டு மையல் ஆனாய்…
எதனால் எதனால்…
இமை கடந்து கண்ணாய்ப் போனாய்…

பெண் : நீயெங்கோ பிறந்தாய்…
நானெங்கோ பிறந்தேன்…
ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்…

பெண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே…
வந்ததே முதற்காதல்…
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல்…
கண்டதும் முதற்காதல்…

பெண் : தூண்டிலில் மீனா தூயவானா…
காரணம் நானா நீயே நீயே சொல்…

BGM

பெண் : கண்களை மூடினால்…
கண்கள் வந்து உள்ளம் கிள்ளும்…
கட்டிலை நாடினால்…
இரவிங்கு நீளம் கொள்ளும்…

பெண் : வேரோடு துடிக்க…
யாரோடு உரைக்க…
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா…

பெண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே…
வந்ததே முதற்காதல்…
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல்…
கண்டதும் முதற்காதல்…

பெண் : தூண்டிலில் மீனா தூயவானா…
காரணம் நானா நீயே நீயே சொல்…


Notes : Vennila Vennila Song Lyrics in Tamil. This Song from Iruvar (1997). Song Lyrics penned by Vairamuthu. வெண்ணிலா வெண்ணிலா பாடல் வரிகள்.


narumugaye-narumugaye-song-lyrics-iruvar

நறுமுகையே நறுமுகையே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீஏ. ஆர். ரகுமான்இருவர்

Narumugaye Narumugaye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

பெண் : திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

—BGM—

ஆண் : மங்கை மான்விழி அம்புகள்…
என் மார் துளைத்ததென்ன…
மங்கை மான்விழி அம்புகள்…
என் மார் துளைத்ததென்ன…

பெண் : பாண்டி நாடனைக் கண்ட என் மனம்…
பசலை கொண்டதென்ன…

ஆண் : நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…
நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…

பெண் : இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை…
இடையினில் மேகலை இருக்கவில்லை…

ஆண் : நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

—BGM—

பெண் : யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…
யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…

ஆண் : யானும் நீயும் எவ்வழி அறிதும்…
உறவு சேர்ந்ததென்ன…

பெண் : ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…

ஆண் : செம்புல்லும் சேர்ந்த நீர் துளி போல்…
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன…

பெண் : திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…


Notes : Narumugaye Narumugaye Song Lyrics in Tamil. This Song from Iruvar (1997). Song Lyrics penned by Vairamuthu. நறுமுகையே நறுமுகையே பாடல் வரிகள்.