பண்ணாரி மாரியம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஎஸ். ஜானகிதேவாசோலையம்மா

Bannari Mariyamma Song Lyrics in Tamil


BGM

பெண் : பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…

பெண் : பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…

பெண் : பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…

பெண் : பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…

பெண் : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…

குழு : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…

பெண் : பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…

குழு : பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…

BGM

பெண் : சீதை தீக்குளிச்சு…
ராமனைத்தான் நம்ப வைச்சா…
ராமாயணம் சொன்ன சேதிதான்…

பெண் : கோவம் கொண்டெழுந்து…
கண்ணகிதான் ஊரெரிச்சா…
நானும் கூட அந்த சாதிதான்…

பெண் : சீதை தீக்குளிச்சு…
ராமனைத்தான் நம்ப வைச்சா…
ராமாயணம் சொன்ன சேதிதான்…

பெண் : கோவம் கொண்டெழுந்து…
கண்ணகிதான் ஊரெரிச்சா…
நானும் கூட அந்த சாதிதான்…

பெண் : மேகம் கருக்கணும்…
மே காத்து அடிக்கணும்…
மும்மாரி சேர்ந்து பெய்யணும்…

பெண் : ஊரு மத்தியில என் பேரு சுத்தமுன்னு…
சாதி சனம் நின்னு பேசணும்…

பெண் : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…

குழு : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…

பெண் : பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…

குழு : பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…

BGM

பெண் : பாதை மாறலடி…
பாயெடுத்து போடலடி…
பத்தினிய பதற வைச்சே…

பெண் : சாமி சந்நதிக்கு…
சத்தியமா சேர வந்த…
பூவு ஒண்ண கருக வைச்சே…

பெண் : பாதை மாறலடி…
பாயெடுத்து போடலடி…
பத்தினிய பதற வைச்சே…

பெண் : சாமி சந்நதிக்கு…
சத்தியமா சேர வந்த…
பூவு ஒண்ண கருக வைச்சே…

பெண் : ஊரு சிரிச்சதும்…
ஓயாம ஏசினதும்…
உன் காதில் கேட்கவில்லையா…

பெண் : நாதியற்று இப்ப…
நானாக தவிக்கிறன்…
நீ கண்ணில் பார்க்கவில்லையா…

பெண் : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…

குழு : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…

பெண் : பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…

குழு : பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…


Notes : Bannari Mariyamma Song Lyrics in Tamil. This Song from Solaiyamma (1992). Song Lyrics penned by Kasthuri Raja. பண்ணாரி மாரியம்மா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top