பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி | சிற்பி | அம்மன் கோவில் வாசலிலே |
Amman Kovil Vaasalile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அம்மன் கோயில் வாசலிலே… ஏ…
குழு : வாசலிலே… ஏஏஏ…
ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே… ஏ…
குழு : பூங்குயிலே… ஏஏஏ…
பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு…
இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு…
ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு…
நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு…
பெண் : அம்மன் கோயில் வாசலிலே… ஏ…
குழு : வாசலிலே… ஏஏஏ…
ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே… ஏ…
குழு : பூங்குயிலே… ஏஏஏ…
—BGM—
ஆண் : ஏரோட்டும் கையும் ஏத்தமிடும் கையும்…
இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும்…
குழு : இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும்…
பெண் : நம்ம கண்ணான ஆத்தா கண்ணெடுத்து பாத்தா…
இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும்…
குழு : இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும்…
ஆண் : அடி மேக்கால ஓடும்…
அந்த வாய்க்கால கேளு…
பெண் : தென்னந்தோப்போரம் பாடும்…
சின்ன மைனாவ கேளு…
ஆண் : இந்த ஊர் கூடி உறவாடி இசைபாடும் திருநாளு…
இதுதான்டி தங்கமணி…
பெண் : அம்மன் கோயில் வாசலிலே… ஏ…
குழு : வாசலிலே… ஏ…
பெண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே… ஏ…
குழு : பூங்குயிலே… ஏ…
—BGM—
பெண் : பானையில வேகும் பச்சரிசி வாசம்…
அது எங்கூறு வெள்ளாமைய பேசும்…
குழு : அது எங்கூறு வெள்ளாமைய பேசும்…
ஆண் : அடி மேலாக சுத்தும் மஞ்ச இஞ்சி கொத்தும்…
மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும்…
குழு : மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும்…
பெண் : அச்சி வெல்லந்தான் சேத்து…
பசு நெய்த்தான் ஊத்து…
ஆண் : அடி யம்மாடி ராக்கு…
புது பொங்கலத்தான் ஆக்கு…
பெண் : அவ தாய்ப்போல காப்பாளே…
புகழ் சேரும் பொருள் சேரும்…
புது வாழ்வு கை வரும்…
ஆண் : அம்மன் கோயில் வாசலிலே… ஏ…
குழு : வாசலிலே… ஏஏஏ…
ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே… ஏ…
குழு : பூங்குயிலே… ஏஏஏ…
பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு…
இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு…
ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு…
நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு…
Notes : Amman Kovil Vaasalile Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Vasalile (1996). Song Lyrics penned by Vaali. அம்மன் கோயில் வாசலிலே பாடல் வரிகள்.