| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| மாணிக்கவாசகர் | சுப்பிரமணியம், முத்துக்குமார், பழனி கே வெங்கடேசன் & பழனி சண்முகசுந்தரம் | Unknown | திருவாசகம் |
Achopathigam Song Lyrics in Tamil
—BGM—
குழு : முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை…
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்…
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைகுழுட…
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே…
குழு : நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனை…
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்…
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு…
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே…
குழு : பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே…
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளி…
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்…
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே…
குழு : மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை…
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்…
சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூநெறியே சேரும்வண்ணம்…
அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே…
குழு : பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு…
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்…
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று…
அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே…
குழு : வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கி…
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனை…
பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து…
அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே…
குழு : தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனை…
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி…
உய்யும்நெறி காட்டுவித்திட் டோங்காரத் துட்பொருளை…
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே…
குழு : சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறி…
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை…
மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்…
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே…
குழு : செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை…
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்…
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த…
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே…
—BGM—
Notes : Achopathigam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Manikkavacakar. அச்சோ பதிகம் பாடல் வரிகள்.

