aariro-song-lyrics-deiva-thiirumagal

ஆரிரோ ஆராரிரோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜி. வி. பிரகாஷ் குமார்தெய்வத்திருமகள்

Aariro Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…
ஓஓ… தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்…
ஓஓ… இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம்…

ஆண் : இரு உயிர் ஒன்று சோ்ந்து இங்கு ஓா் உயிர் ஆகுதே…
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

BGM

ஆண் : முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே…
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே…
வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே…
பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே…
இது போல் ஆனந்தம் வேறில்லையே…

ஆண் : இரு மனம் ஒன்று சோ்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே…
ஒரு நொடி போதும் போதும் என்று ஓா் குரல் கேட்குதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

BGM

ஆண் : கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்…
கேட்காத ஓா் பாடல் அதில் இசை மீட்டினாள்…
அடடா… தெய்வம் இங்கே வரம் ஆனதே…
அழகாய் வீட்டில் விளையாடுதே…
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே…

ஆண் : கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே…
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண் : ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

BGM


Notes : Aariro Song Lyrics in Tamil. This Song from Deiva Thiirumagal (2011). Song Lyrics penned by Na. Muthukumar. ஆரிரோ ஆராரிரோ பாடல் வரிகள்.