பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | ரீமா | சி.சத்யா | அரண்மனை 3 |
Sengaandhale Song Lyrics in Tamil
பெண் : செங்காந்தலே உனை அள்ளவா…
செல்ல தென்றலே உனை ஏந்தவா…
அழைத்தேன் உன்னை என்னோடு…
இருப்பேன் என்றும் உன்னோடு…
அன்பே உன் கைகள் என்னை தீண்டுமா…
பெண் : மிதந்தேன் காற்றில் காற்றாக…
நடந்தேன் இரவில் நிழலாக…
கண்ணே உன் கண்கள் என்னை காணுமா…
பெண் : ஆராரோ… ஆராரிரோ…
ஆராரோ… ஆராரிரோ…
—BGM—
பெண் : சின்ன சின்ன மலர் குவியலை போல்…
எனக்குள் மலர்ந்தாய்…
என்ன என்ன உயிர் சிலிர்க்க வைத்து…
கருவில் அசைந்தாய்…
பெண் : உன்னைப் பெறும் அன்னை வலி…
வலியல்ல ஓர் வரமே…
என் மார்பிலே கூடுகட்டி…
நீ உறங்கிடும் நாள் வருமே…
பெண் : பால் கசியும் இதழோடு…
உன்னைக் காணவே…
தெய்வம் கூட ஓசை இன்றி…
வந்து போகுமே…
பெண் : செங்காந்தலே உனை அள்ளவா…
செல்ல தென்றலே உனை ஏந்தவா…
—BGM—
பெண் : அன்னை நெஞ்சில் அனல் எரிகையிலே…
மழைபோல் வந்தாய்…
எந்த திசையிலும் இருட்டுக்குள் நான்…
வெளிச்சம் தந்தாய்…
பெண் : ஜென்மம் ஒன்று போதாதென்று…
ஏழு ஜென்மம் நான் சுமப்பேன்…
என் வாழ்விலே ஒரே இன்பம்…
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்…
பெண் : உன் மேல் தூசும் தீண்டாமல்…
காப்பேன் அன்பே…
காலம் முழுதும் உனக்காக…
வாழ்வேன் அன்பே…
பெண் : செங்காந்தலே… ஆராரிரோ…
சின்ன தென்றலே… ஆராரிரோ…
—BGM—
Notes : Sengaandhale Song Lyrics in Tamil. This Song from Aranmanai 3 (2021). Song Lyrics penned by Pa. Vijay. செங்காந்தலே பாடல் வரிகள்.