ஆராரோ பாட இங்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாஆதலால் காதல் செய்வீர்

Aararo Paada Ingu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை…
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை…
நீ மண்ணில் வந்துதிக்க…
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை…
விதி கண்ணை மூடிக்கொண்டு…
தெருவில் எறிந்ததொரு வானவில்லை…

ஆண் : என் அன்பே என் அமுதே…
இந்த காயம் ஆறிவிடும் தூங்கு…
என் கண்ணே என் மணியே…
உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு…

ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை…
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை…

BGM

ஆண் : கடவுளின் உருவம் எதுவென மழலை சிரிப்பிலே…
அறிய வைக்கின்றாய்…
சேற்றிலே வளர்ந்த தாமரை மலரைப் போலவே…
நீ தோன்றினாய்…

ஆண் : பூமியிது புனிதமில்லை…
ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது…
தீயிலுமே நீந்தி வர…
நீ இன்று கற்றுக்கொள் நல்லது…

ஆண் : இந்த உலகம் என்பது…
இன்ப துன்பம் உள்ள பாதையடா…
நீ முட்டிமோதி எழ…
வழிகள் சொல்லித்தரும் கீதையடா…

ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை…
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை…

BGM

ஆண் : நதியிலே விழுந்த இலையென…
உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும்…
அலைவரும் அடுத்த திருப்பத்தில்…
உனது கரை எதிரிலே தோன்றிடும்…

ஆண் : வேர் எங்கோ செடி எங்கோ…
நீ இங்கே தனியாய் பூக்கிறாய்…
வழி தவறி வீட்டில் வந்த…
பறவையைப் போலவே பார்க்கிறாய்…

ஆண் : நீ கடவுள் எழுதி வைத்த…
மண்ணில் வந்த ஒரு கவிதையடா…
அதன் இடையில் இரு உயிர்கள்…
செய்த எழுத்துப்பிழை பாவமடா…

BGM

ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை…
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை…
நீ மண்ணில் வந்துதிக்க…
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை…
விதி கண்ணை மூடிக்கொண்டு…
தெருவில் எறிந்ததொரு வானவில்லை…


Notes : Aararo Paada Ingu Song Lyrics in Tamil. This Song from Aadhalal Kadhal Seiveer (2013). Song Lyrics penned by Na. Muthukumar. ஆராரோ பாட இங்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading