பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | யுவன் ஷங்கர் ராஜா | யுவன் ஷங்கர் ராஜா | ஆதலால் காதல் செய்வீர் |
Aararo Paada Ingu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை…
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை…
நீ மண்ணில் வந்துதிக்க…
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை…
விதி கண்ணை மூடிக்கொண்டு…
தெருவில் எறிந்ததொரு வானவில்லை…
ஆண் : என் அன்பே என் அமுதே…
இந்த காயம் ஆறிவிடும் தூங்கு…
என் கண்ணே என் மணியே…
உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு…
ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை…
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை…
—BGM—
ஆண் : கடவுளின் உருவம் எதுவென மழலை சிரிப்பிலே…
அறிய வைக்கின்றாய்…
சேற்றிலே வளர்ந்த தாமரை மலரைப் போலவே…
நீ தோன்றினாய்…
ஆண் : பூமியிது புனிதமில்லை…
ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது…
தீயிலுமே நீந்தி வர…
நீ இன்று கற்றுக்கொள் நல்லது…
ஆண் : இந்த உலகம் என்பது…
இன்ப துன்பம் உள்ள பாதையடா…
நீ முட்டிமோதி எழ…
வழிகள் சொல்லித்தரும் கீதையடா…
ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை…
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை…
—BGM—
ஆண் : நதியிலே விழுந்த இலையென…
உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும்…
அலைவரும் அடுத்த திருப்பத்தில்…
உனது கரை எதிரிலே தோன்றிடும்…
ஆண் : வேர் எங்கோ செடி எங்கோ…
நீ இங்கே தனியாய் பூக்கிறாய்…
வழி தவறி வீட்டில் வந்த…
பறவையைப் போலவே பார்க்கிறாய்…
ஆண் : நீ கடவுள் எழுதி வைத்த…
மண்ணில் வந்த ஒரு கவிதையடா…
அதன் இடையில் இரு உயிர்கள்…
செய்த எழுத்துப்பிழை பாவமடா…
—BGM—
ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை…
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை…
நீ மண்ணில் வந்துதிக்க…
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை…
விதி கண்ணை மூடிக்கொண்டு…
தெருவில் எறிந்ததொரு வானவில்லை…
Notes : Aararo Paada Ingu Song Lyrics in Tamil. This Song from Aadhalal Kadhal Seiveer (2013). Song Lyrics penned by Na. Muthukumar. ஆராரோ பாட இங்கு பாடல் வரிகள்.