| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| யுகபாரதி | கார்த்தி | ஜி. வி. பிரகாஷ் குமார் | சர்தார் |
Yaerumayileri Song Lyrics in Tamil
ஆண் : குன்றான குன்றத்திலே…
கோமன் அவன் குடி இருக்க…
கோடாங்கி பாட்டு எடுத்தான்…
கேக்குதடி அரோகரா அரோகரா அரோகரா…
—BGM—
ஆண் : கும்முனா கும்மிருட்டு கொஞ்சுனா ஜல்லிக்கட்டு…
வள்ளி உன் குறும்பழகு டமுக்கு டிய்யாலோ…
வரமா வந்தே நிப்பேன் டிமுக்கு டுப்பாலோ…
ஆண் : அள்ளுன அள்ளிகிட்டு ஆசைய மல்லுகட்டு…
வள்ளி உன் கணுக்காலு டமுக்கு டப்பாலோ…
வண்ணாத்தி பாறையெல்லாம் வழுக்கி நிக்காலோ…
ஆண் : ஒட்டு மாங்கனி போல…
ஒயிலான ஓம் மூக்கு…
முட்டியே கொட சாஞ்சா…
அதுதானே என் சோக்கு…
ஆண் : பொட்டழகு வள்ளியம்மா…
போடணுமே நெத்திச்சுட்டி…
கிட்ட வந்து அள்ளிகிட்டா…
கட்டிக்குவேன் தாலி கட்டி…
ஆண் : ஏறு மயிலேறி விளையாடி வருவேனே…
எட்டும் வினை தீர்த்தே…
உனை ஏந்தி கொள்வேன் நானே…
ஆண் : ஆறுமுக சாமி அருளாசி தருவேனே…
சிந்தும் தமிழ் கேட்டே…
மழை பெய்யும் உச்சி வானே…
—BGM—
ஆண் : ஏ… ஈசனே உனக்கப்பன் என்றாலும் கூட…
இன்பமே உனை வேண்ட…
அண்டாதே சோகம்…
—BGM—
ஆண் : நீ பிஞ்சிலே பழுத்தேன்னு சொன்னாலும் கூட…
நெஞ்சமே உனை வேண்ட…
கூடும் சந்தோஷம்…
ஆண் : ஔவையென் வாயூர…
வரும் சொல்லே வடிவேலே…
உன்னை யாம் புகழ்ந்தாலே…
தினந்தோறும் திருநாளே
ஆண் : ஏறு மயிலேறி விளையாடி வருவேனே…
எட்டும் வினை தீர்த்தே…
உனை ஏந்தி கொள்வேன் நானே…
ஆண் : ஆறுமுக சாமி அருளாசி தருவேனே…
சிந்தும் தமிழ் கேட்டே…
மழை பெய்யும் உச்சி வானே…
—BGM—
ஆண் : கடிவாளம் எனக்கேதும் கிடையாதப்பா…
கடல் தாண்டி மாலை தாண்டி ஜெயிப்பேனப்பா…
கொடி காக்க குலம் காக்க பிறந்தேனப்பா…
பகையோரை பொலி போட எழுந்தேனப்பா…
ஆண் : குடிநீருள்ளும் இருப்பேனப்பா…
உழுவோர் நெஞ்சை உணர்வேனப்பா…
முதலேதப்பா முடிவேதப்பா…
அழுவோர் கண்ணை துடைப்பேனப்பா…
ஆண் : ஏறு மயிலேறி விளையாடி வருவேனே…
எட்டும் வினை தீர்த்தே…
உனை ஏந்தி கொள்வேன் நானே…
ஆண் : ஆறுமுக சாமி அருளாசி தருவேனே…
சிந்தும் தமிழ் கேட்டே…
மழை பெய்யும் உச்சி வானே…
Notes : Yaerumayileri Song Lyrics in Tamil. This Song from Sardar (2022). Song Lyrics penned by Yugabharathi. ஏறு மயிலேறி பாடல் வரிகள்.


