வானத்து நிலவெடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்பி. உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாஎஸ். ஏ. ராஜ்குமார்சிம்மராசி

Vanathu Nilaveduthu Song Lyrics in Tamil


ஆண் : வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா…
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா…

பெண் : ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்…
ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்…

ஆண் : அழகு பூங்கொடியே…
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை…
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை…

பெண் : வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா…

BGM

ஆண் : உங்கள் வீட்டு தோட்டத்தில் நம் நெஞ்சம் சுற்றுவதென்ன…
பெண் : கண்ணாமூச்சி ஆட்டத்தில் பூக்கள் கை தட்டுவதென்ன…

ஆண் : சிரிக்கின்ற மலருக்கு கவிதை சொல்லிக்கொடு…
சிரிக்கின்ற இரவுக்கு கனவை அள்ளிக்கொடு…

பெண் : கன்னத்தில் கன்னத்தில் மீசை உரசுது…
கண்ணுக்குள் கண்ணுக்குள் மின்னல் அடிக்குது…

ஆண் : காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை…
பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை…

ஆண் : வானத்து நிலவெடுத்துஊ வாசலில் வைக்கட்டுமா…
பெண் : செவ்வந்தி பூக்களிலேஏ பந்தலை போடட்டுமா…

BGM

ஆண் : சித்திரை பெண்ணே வெட்க்கத்தை தூரத்தில் போக சொல்லு…
கட்டளை இட்டு சொர்க்கத்தை பக்கத்தில் நிற்க சொல்லு…

பெண் : இனிக்கின்ற இளமைக்கு சிறகை கட்டிவிடு…
மிதக்கின்ற நிலவுக்கு நடக்க கற்றுக்கொடு…

ஆண் : என்னவோ என்னவோ எனக்குள் நடக்குது…
அம்மம்மா அம்மம்மா மனசு பறக்குது…

பெண் : காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை…
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை…

ஆண் : வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா…
பெண் : செவ்வந்தி பூக்களிலேஏ பந்தலை போடட்டுமா…

ஆண் : ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்…
பெண் : ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்…

ஆண் : அழகு பூங்கொடியே…
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை…
பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை…

ஆண் : வானத்து நிலவெடுத்துஊ வாசலில் வைக்கட்டுமா…
பெண் : செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா…


Notes : Vanathu Nilaveduthu Song Lyrics in Tamil. This Song from Simmarasi (1998). Song Lyrics penned by Kalai Kumar. வானத்து நிலவெடுத்து பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top