வானத்தை பார்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்சந்திரபோஸ்மனிதன் (1987)

Vanaththai Parthen Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானத்தை பார்த்தேன்…
பூமியை பார்த்தேன்…
மனுஷனை இன்னும் பார்க்கலையே…

BGM

ஆண் : வானத்தை பார்த்தேன்…
பூமியை பார்த்தேன்…
மனுஷனை இன்னும் பார்க்கலையே…
அட பல நாள் இருந்தேன் உள்ளே…
அந்த நிம்மதி இங்கில்லே…

ஆண் : உள்ள போன அத்தனை பேரும்…
குத்தவாளி இல்லீங்க…
வெளியே உள்ள அத்தனை பேரும்…
புத்தன் காந்தி இல்லீங்க…

ஆண் : வானத்தை பார்த்தேன்…
பூமியை பார்த்தேன்…
மனுஷனை இன்னும் பார்க்கலையே…

BGM

ஆண் : குரங்கிலிருந்து பிறந்தானா…
குரங்கை மனிதன் பெற்றானா…
யாரை கேள்வி கேட்பது…
டார்வின் இல்லையே…

ஆண் : கடவுள் மனிதனை படைத்தானா…
கடவுளை மனிதன் படைத்தானா…
ரெண்டு பேரும் இல்லையே…
ரொம்ப தொல்லையே…

ஆண் : அட நான் சொல்வது உண்மை…
இதை நீ நம்பினால் நன்மை…
அட நான் சொல்வது உண்மை…
இதை நீ நம்பினால் நன்மை…

ஆண் : வானத்தை பார்த்தேன்…
பூமியை பார்த்தேன்…
மனுஷனை இன்னும் பார்க்கலையே…
அட பல நாள் இருந்தேன் உள்ளே…
அந்த நிம்மதி இங்கில்லே…

BGM

ஆண் : சில நாள் இருந்தேன் கருவறையில்…
பல நாள் கிடந்தேன் சிறை அறையில்…
அம்மா என்னை ஈன்றது அமாவாசையாம்…

ஆண் : அதனால் பிறந்தது தொல்லையடா…
ஆனால் என் மனம் வெள்ளையடா…
பட்டபாடு யாவுமே பாடம்தானடா…

ஆண் : ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை…
இல்லை போராட்டமே வாழ்க்கை…
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை…
ஹா… இல்லை போராட்டமே வாழ்க்கை…

ஆண் : வானத்தை பார்த்தேன்…
பூமியை பார்த்தேன்…
மனுஷனை இன்னும் பார்க்கலையே…
அட பல நாள் இருந்தேன் உள்ளே…
அந்த நிம்மதி இங்கில்லே…

ஆண் : உள்ள போன அத்தனை பேரும்…
குத்தவாளி இல்லீங்க…
வெளியே உள்ள அத்தனை பேரும்…
புத்தன் காந்தி இல்லீங்க…

ஆண் : வானத்தை பார்த்தேன்…
பூமியை பார்த்தேன்…
மனுஷனை இன்னும் பார்க்கலையே…
அட பல நாள் இருந்தேன் உள்ளே…
அந்த நிம்மதி இங்கில்லே…
அந்த நிம்மதி இங்கில்லே…


Notes : Vanaththai Parthen Song Lyrics in Tamil. This Song from Manithan (1987). Song Lyrics penned by Vairamuthu. வானத்தை பார்த்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top