பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பிரியன் | கார்த்திக் & ரம்யா | விஜய் ஆண்டனி | யுவன் யுவதி |
Un Kannai Partha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : உன் கண்ணை பார்த்த பிறகு…
என் உள்ளே லட்சம் சிறகு…
உன் ஓர பார்வை அசைவில்…
மனம் குடை சாயும்…
ஆண் : நீ வந்து போன பிறகு…
தலை கீழாய் மாறும் உலகு…
உன் இல்லம் இருக்கும் திசையில்…
தெரியுது என் பாதம்…
ஆண் : தண்ணீரில் ஆடும் அலையாய்…
காற்றோடு மிதக்கும் இலையாய்…
என் மனதும் மாறுகின்றதே உனதாய்…
ஆண் : சில நேரம் மிகவும் சுகமாய்…
சில நேரம் மிகவும் சுமையாய்…
ஐயோ காதல் படுத்துகின்றதே புதிதாய்…
ஆண் : உன் கண்ணை பார்த்த பிறகு…
என் உள்ளே லட்சம் சிறகு…
உன் ஓர பார்வை அசைவில்…
மனம் குடை சாயும்…
—BGM—
ஆண் : அடி உன்னை போல பெண்ணை…
எங்கும் கண்டதில்லை…
இன்று வரை என் மனதை…
யாருமே ஈர்த்ததில்லை… ஓ ஓஹ் ஓ…
ஆண் : உன் உதடு எந்தன் பேரை சொல்லும் நேரம்…
சிலிர்கிறேன் தவிகிறேன்…
என்வசம் நானும் இல்லை… ஓ ஓஹ் ஓ…
ஆண் : மழை நின்ற போதும் கிளைகள்…
சிறு தூறல் போடுவது போல்…
நீ கடந்த பிறகும் நினைவில் இருப்பாய்…
ஆண் : உன் கண்ணை பார்த்த பிறகு…
என் உள்ளே லட்சம் சிறகு…
உன் ஓர பார்வை அசைவில்…
மனம் குடை சாயும்…
—BGM—
ஆண் : என்னை விட்டு உள்ளம்…
உந்தன் பின்னால் செல்லும்…
தடுக்கிறேன் தவிர்கிறேன்…
இதயமும் கேட்கவில்லை…
ஆண் : நான் இன்று போல…
என்றும் சொக்கிபோனதில்லை…
இதற்குமுன் எனக்கு இந்த…
பரவசம் பாய்ந்ததில்லை…
ஆண் : நீ நேற்று எங்கு இருந்தாய்…
என் நெஞ்சில் இன்று நுழைந்தாய்…
இனி நாளை என்ன அவஸ்தை புரிவாய்…
ஆண் : உன் கண்ணை பார்த்த பிறகு…
என் உள்ளே லட்சம் சிறகு…
உன் ஓர பார்வை அசைவில்…
மனம் குடை சாயும்…
ஆண் : நீ வந்து போன பிறகு…
தலை கீழாய் மாறும் உலகு…
உன் இல்லம் இருக்கும்…
திசையில் தெரியுது என் பாதம்…
ஆண் : தண்ணீரில் ஆடும் அலையாய்…
காற்றோடு மிதக்கும் இலையாய்…
என் மனதும் மாறுகின்றதே உனதாய்…
ஆண் : சில நேரம் மிகவும் சுகமாய்…
சில நேரம் மிகவும் சுமையாய்…
ஐயோ காதல் படுத்துகின்றதே புதிதாய்…
ஆண் : உன் கண்ணை பார்த்த பிறகு…
என் உள்ளே லட்சம் சிறகு…
உன் ஓர பார்வை அசைவில்…
மனம் குடை சாயும்…
—BGM—
Notes : Un Kannai Partha Song Lyrics in Tamil. This Song from Yuvan Yuvathi (2011). Song Lyrics penned by Priyan. உன் கண்ணை பாடல் வரிகள்.