பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கார்த்திக் நேதா | ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் | ஜி. வி. பிரகாஷ் குமார் | அநீதி |
Thuli Eeram Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : துளி ஈரம் சுரக்காத வாழ்வில்…
அரும் தூங்கி வழிகின்ற ஊரில்…
ஒரு நீதி தலையேறி ஆடும்…
அநீதி…
—BGM—
ஆண் : மதயானை அரசாளும் காட்டில்…
தனக்கான இடம் தேடும் ஈசல்…
கிடைக்காமல் அலை மோதும் சோகம்…
அநீதி…
ஆண் : யார் நீதி மேலோ…
யார் நீதி கீழோ…
ஆண் : பணம் காசின் கையோங்கும் போது…
பசி யாவும் வாழேந்தும் போது…
முரண்பாட்டின் மலராக பூக்கும்…
அநீதி… அநீதி…
—BGM—
ஆண் : கானல் நீரோ சிறு ஊற்றோ…
மீதிதான் யாதோ…
ஆண் : பூவின் காம்பே சீழ் என்றால்…
வாசம்தான் கனவோ…
விண்மீனோ கண்ணீரோ…
மீதிதான் எதுவோ…
ஆண் : மானுடம் என்பதே…
மாபெரும் தோல்வியோ…
எளியவர் வாழும் வாழ்வோ…
அநீதி…
ஆண் : மீன்களின் தேவையோ…
தூண்டிலின் ஆசையோ…
உயிர் வாழ்தலின் கூத்திலே…
யாவுமே கேள்வியோ…
—BGM—
ஆண் : கானல் நீரோ சிறு ஊற்றோ…
மீதிதான் யாதோ…
Notes : Thuli Eeram Song Lyrics in Tamil. This Song from Aneethi (2023). Song Lyrics penned by Karthik Netha. துளி ஈரம் பாடல் வரிகள்.