பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | ஆலப் ராஜு, தேவன் & ராணினா ரெட்டி | ஹாரிஸ் ஜெயராஜ் | எங்கேயும் காதல் |
Thee Illai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தீ இல்லை புகை இல்லை…
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே…
நூல் இல்லை தறி இல்லை…
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே…
ஆண் : பூ இல்லை மடல் இல்லை…
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே…
என்னை உன்னிடம் இழக்கிறேன்…
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்…
ஆண் : முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்…
சின்ன சின்னதாய்
ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ…
விலையாய் தந்தேனே என்னை…
ஓஹோ ஓஹோ ஓஹோ…
வாங்கிக் கொண்டேனே உன்னை…
ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஆடை கொண்டதோ தென்னை…
—BGM—
பெண் : வெகு நாளாய் கேட்டேன்…
விழித் தூரல் போட்டாய்…
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே… ஓஹோ…
பெண் : விலகாத கையைத் தொட்டு…
விழி ஓர மையைத் தொட்டு…
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே…
பெண் : இலக்கிய கனியை விழுங்கியது…
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது…
இது ஒரு சாட்சி போதாதா…
கண்கள் மோதாதா காதல் ஊராதா…
ஆண் : தீ இல்லை புகை இல்லை…
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே…
நூல் இல்லை தறி இல்லை…
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே…
ஆண் : பூ இல்லை மடல் இல்லை…
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே…
என்னை உன்னிடம் இழக்கிறேன்…
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்…
ஆண் : முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்…
சின்ன சின்னதாய்…
—BGM—
ஆண் : புனல் மேலே வீற்று…
பனி வாடை காற்று…
புனைந்தது நமக்கொரு புது பாட்டு…
பெண் : கடற்கரை நாரைக் கூட்டம்…
கரைந்திங்கு ஊரை கூட்டும்…
இருவரும் நகர்வலம் வர பார்த்து…
பெண் : சிலு சிலு என்று குளிரடிக்க…
தொடு தொடு என்று தளிர் துடிக்க…
எனக்கொரு பார்வை நீதானே…
என்னை எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா…
ஆண் : தீ இல்லை புகை இல்லை…
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே…
நூல் இல்லை தறி இல்லை…
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே…
ஆண் : பூ இல்லை மடல் இல்லை…
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே…
என்னை உன்னிடம் இழக்கிறேன்…
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்…
ஆண் : முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்…
சின்ன சின்னதாய்…
ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ…
விலையாய் தந்தேனே என்னை…
ஓஹோ ஓஹோ ஓஹோ…
வாங்கிக் கொண்டேனே உன்னை…
ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஆடை கொண்டதோ தென்னை…
Notes : Thee Illai Song Lyrics in Tamil. This Song from Engeyum Kaadhal (2011). Song Lyrics penned by Vaali. தீ இல்லை பாடல் வரிகள்.