Tag Archives: ராஜீவ் மேனன்

naalai-oru-poo-malarum-song-lyrics

நாளை ஒரு பூ மலரும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஉத்தாரா உன்னிகிருஷ்ணன், ஷில்வி ஷரோன் & பத்மஜா ஸ்ரீனிவாசன்ராஜீவ் மேனன்நாட்படு தேறல்

Naalai Oru Poo Malarum Song Lyrics in Tamil


பெண் : நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…

—BGM—

பெண் : நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…

பெண் : தாவரங்கள் கைதட்டும்…
தாய்ச்செடிக்குக் கொண்டாட்டம்…
வீண்மீன் போன்றதொரு மண்மீன் நானென்று…
வான்வெளியைப் பார்த்து வண்ணமலர் கண்ணடிக்கும்…

பெண் : அழியும் பொருளோடு…
அழியாத பேரழகு…
சேர்ந்தவிதம் எங்ஙனமோ…
தெய்வங்கள் உரையாடும்…
தெய்வங்கள் உரையாடும்…

—BGM—

பெண் : நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…

—BGM—

பெண் : சாயம்போன வாழ்வோடு…
சட்டென்று நிறமூட்டும்…
காற்றினைத்து வைத்து…
காயவைத்து மணமூட்டும்…

பெண் : வரிவண்டு பசியாற…
வாவென்று தேனூட்டும்…
உண்டாடிய களைப்பாற…
உள்வீட்டில் மஞ்சமிடும்…

பெண் : குலமகளின் குழல் சேர்ந்தால்…
குலம் வளர்க்கும் பொருளாகும்…
பூக்கூடை சேர்ந்தாலோ…
பூக்காரி உணவாகும்…

—BGM—

பெண் : சந்நிதி சேர்ந்தாலோ…
சாமிக்கு வரமாகும்…
சருகாய்ப் போனாலும்…
பூமிக்கு உரமாகும்…

பெண் : மணங்கொள்ளும் மேடையிலே…
மங்கலத்தின் மணமாகும்…
படமாகும் வேளையிலோ…
படைக்கின்ற சரமாகும்…

பெண் : சின்னஞ்சிறு பூவோடு…
என்னென்ன பெருவாழ்வு…
நூற்றாண்டு வாழ்வோடு…
நமக்குண்டா பூவாழ்வு…

—BGM—

பெண் : நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…


Notes : Naalai Oru Poo Malarum Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. நாளை ஒரு பூ மலரும் பாடல் வரிகள்.