பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி | இளையராஜா | தளபதி |
Sundari Kannal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
ஆண் : நான் உனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே நம் ஜீவனே…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
—BGM—
பெண் : வாய் மொழிந்த வார்த்தை யாவும்…
காற்றில் போனால் நியாயமா…
பாய் விரித்து பாவை பார்த்த…
காதல் இன்பம் மாயமா…
ஆண் : ஆஆ… வாள் பிடித்து நின்றால் கூட…
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்…
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட…
ஜீவன் உன்னை சேர்ந்திடும்…
பெண் : தேனிலவு நான் வாழ…
ஏன் இந்த சோதனை…
ஆண் : வான் நிலவை நீ கேளு…
கூறும் என் வேதனை…
பெண் : என்னைத்தான் அன்பே மறந்தாயோ…
ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ…
பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
பெண் : நான் உனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே நம் ஜீவனே…
ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
—BGM—
பெண் : சோலையிலும் முட்கள் தோன்றும்…
நானும் நீயும் நீங்கினால்…
பாலையிலும் பூக்கள் பூக்கும்…
நான் உன் மார்பில் தூங்கினால்…
ஆண் : ஆஆ… மாதங்களும் வாரம் ஆகும்…
நானும் நீயும் கூடினால்…
வாரங்களும் மாதம் ஆகும்…
பாதை மாறி ஓடினால்…
பெண் : கோடி சுகம் வாராதோ…
நீ எனை தீண்டினால்…
ஆண் : காயங்களும் ஆறாதோ…
நீ எதிர் தோன்றினால்…
பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்…
ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்…
ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
ஆண் : நான் உனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே நம் ஜீவனே…
ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
Notes : Sundari Kannal Song Lyrics in Tamil. This Song from Thalapathi (1991). Song Lyrics penned by Vaali. சுந்தரி கண்ணால் பாடல் வரிகள்.