பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | மனோ & எஸ்.பி.பி.பல்லவி | ஏ.ஆர்.ரகுமான் | பவித்ரா |
Sevvaanam Chinna Pen Song Lyrics in Tamil
—BGM—
பெண் : செவ்வானம் சின்னப் பெண் சூடும்…
குங்குமம் ஆகாதோ…
விண்மீன்கள் கன்னிப் பெண் சூடும்…
மல்லிகை ஆகாதோ…
ஆண் : கண்ணால் உன்னை வரவேற்று…
பொன் கவிக் குயில் பாடாதோ…
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு…
என் வண்ணக்கிளி சாயாதோ…
பெண் : செவ்வானம்…
ஆண் : சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதோ…
பெண் : விண் மீன்கள்…
ஆண் : கன்னிப் பெண் சூடும் மல்லிகை ஆகாதோ…
—BGM—
ஆண் : பொன்னுடல் தன்னை என் கையில் ஏந்த…
என்னடி யோசிக்கிறாய்…
பெண் : மொத்தத்தில் காதலின் எடை என்னாகும்…
இப்படி சோதிக்கிறாய்…
ஆண் : நிலவை படைத்து முடித்த கையில்…
அந்த பிரம்மன் உன்னை படைத்துவிட்டான்…
பெண் : என்னை படைத்து முடித்த கையில்…
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்…
ஆண் : செவ்வானம் சின்னப் பெண் சூடும்…
குங்குமம் ஆகாதோ…
பெண் : விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்…
மல்லிகை ஆகாதோ…
—BGM—
பெண் : செண்பகப் பூவின் மடல்களை திறந்து…
தென்றல் தேடுவதென்ன…
ஆண் : தென்றல் செய்த வேலையை சொல்லி…
என்னை பார்ப்பதென்ன…
பெண் : பார்வையின் ஜாடை புரியாமல்…
நீ பாட்டு பாடி ஆவதென்ன…
ஆண் : பல்லவி சரணம் முடிந்தவுடன்…
நாம் பங்குபெறும் காட்சியென்ன…
பெண் : செவ்வானம் சின்னப் பெண் சூடும்…
குங்குமம் ஆகாதோ…
பெண் : விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்…
ஆண் : மல்லிகை ஆகாதோ…
பெண் : கண்ணால் உன்னை வரவேற்று…
பொன் கவிக் குயில் பாடாதோ…
ஹே கண்ணாளன் தோளில் இடம் கேட்டு…
என் வண்ணக்கிளி சாயாதோ…
பெண் : கண்ணால் உன்னை வரவேற்று…
பொன் கவிக் குயில் பாடாதோ…
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு…
என் வண்ணக்கிளி சாயாதோ…
Notes : Sevvaanam Chinna Pen Song Lyrics in Tamil. This Song from Pavithra (1994). Song Lyrics penned by Vairamuthu. செவ்வானம் சின்னப் பெண் பாடல் வரிகள்.