| பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கமல்ஹாசன் | இளையராஜா | தேவர் மகன் |
Sandhu Pottu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சாந்து பொட்டு…
ஒரு சந்தன பொட்டு…
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு…
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா…
ஆண் : பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு…
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா…
ஆண் : கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன்… ஹோய்…
ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன்…
ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன்… ஹோய்…
உங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன்…
ஆண் : சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு…
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா…
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு…
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா…
—BGM—
ஆண் : சுத்தத் தமிழ் வீரம் ரத்தத்துல ஊறும்…
சிங்கத் தமிழன் சங்கத் தமிழன்…
எத்தனையோ நாடு சுத்தி வந்த ஆளு…
புத்தி இருக்கு சக்தி இருக்கு…
குழு : ஊராரும் அண்ணனா தம்பியா பார்க்கும்…
அன்பான உள்ளம்தான் உள்ளவரு…
யாராச்சும் முட்டின மோதினா போச்சு…
அஞ்சாமக் குட்டுவார் தட்டுவாரு…
ஆண் : ஒரு வாய்க் கொழுப்பெடுத்தா…
அடுத்தவன் வரட்டிழுப்பிழுத்தா…
அவன் தோலுரிப்பவண்டா…
தமிழச்சி பால் குடிச்சவண்டா…
ஆண் : அட விஷயங்கள் பல அறிஞ்சவன் நான்…
வெவரங்கள் பல புரிஞ்சவன் நான்…
சண்டைக்கு வந்தா சவால் விட்டா…
தடியத்தான் புடிச்சித்தான்…
ஆண் : கை விரலில சுத்துற சுத்துல…
அண்ணாச்சி உன்ன நான்…
புண்ணாக்கு தின்ன வைப்பேன்…
ஆண் : சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு…
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா…
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு…
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா… ஹா…
—BGM—
ஆண் : எங்கிட்டதான் போட்டி போடுறவன் வேட்டி… …
காத்தில் பறக்கும் ஊரு சிரிக்கும்…
எட்டடி நீ பாஞ்சா பத்தடி நான் பாஞ்சு…
பல்ல ஒடப்பேன் சில்லை ஒடப்பேன்…
குழு : சூராதி சூரரும் தீரரும் யாரு…
கோதாவில் ஒத்தையா நிக்கிறாரு…
வந்தாக்கா நெத்தியின் மத்தியில் ஜோரா…
சுண்ணாம்பு பொட்டதான் வக்கிறாரு…
ஆண் : கம்பு சாத்திரம் தெரியும்…
அதில் உள்ள சூட்சமம் தெரியும்…
ஒரு ஆத்திரம் பொறந்தா…
அப்போ இவன் யாருன்னு புரியும்…
ஆண் : அட படபடவென அடிக்கட்டுமா…
பொடிபட ஒன்ன நொறுக்கட்டுமா…
அத்திரி பச்சா கத்திரி பச்சா…
ஒதுங்கிக்க ஒளிஞ்சிக்க…
ஆண் : ஒன் இடுப்புல போடுற போடுல…
ஒக்காத்தி உன்ன நான்…
முக்காடு போட வப்பேன்…
ஆண் : சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு…
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா…
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு…
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா…
ஆண் : கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன்… ஹொய்…
ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன்… ஹோய்…
ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன்… ஹொய்…
ஒங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன்…
ஹோய் ஹோய் ஹோய்…
ஆண் : சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு…
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா…
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு…
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா…
Notes : Sandhu Pottu Song Lyrics in Tamil. This Song from Thevar Magan (1992). Song Lyrics penned by Vaali. சாந்து பொட்டு பாடல் வரிகள்.

