ராக்குயிலே கண்ணுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாஹம்சலேகாபுதிய வானம்

Raakuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…

ஆண் : ஆதரவா என் தோள் தரவா…
கெஞ்சுது கெஞ்சுது தேகம்…
மாசு இல்லா மாமனுக்கு…
சம்மதம் தந்திட வேணும்…
மந்திரம் சொல்லிட வேணும்…

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…

BGM

பெண் : சக்கரை பேச்சு பேசி…
உங்க வித்தைய காட்ட வேண்டாம்…
பத்தர மாத்து தங்கம்…
என முத்திர போட வேண்டாம்…
தொட்டு தாலி கட்டியதெல்லாம் வேஷமானதா…

BGM

ஆண் : சத்திய பேச்சுக்காரன்…
நான் சொல்லுறேன் கேளு மானே…
நம்பிக்கை ஓட்டு கேட்டா…
என் உசிர கூடதாறேன்…
உன்னை காக்கும் காவல்காரன் நான்தானடி…

பெண் : பாசமெல்லாம் சந்தேகத்துல…
விலகிப் போச்சு மாமா…

ஆண் : வா குயிலே செந்தேன் மலரே…
விளக்கம் ஒண்ணு தாரேன்…
அட விளங்கிப் போகும் மானே…

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…

BGM

ஆண் : நித்திரை போச்சு மானே…
என் வித்தைய காட்டலாமா…
பத்தினி தோட்டம்தானே…
நான் ஒத்திகை பார்க்கலாமா…
பட்டாம் பூச்சி பாடுற பாட்டு பூவில் கேட்குதா… ஆஆ…

BGM

பெண் : மங்கைய பார்த்து பார்த்து…
ஒரு மன்மத காத்து வீசும்…
வஞ்சனை ஏதும் இல்ல…
இனி பஞ்சணைதானே எல்ல…
வட்டம் போடும் வாலிப ஆசை தொட்டா தீருமா…

ஆண் : நூலிடையே திண்டாடுறியே சேர நாட்டு தேரே…

பெண் :வாய் திறந்து செவ்வாய் திறந்து…
கதைய சொல்லித் தாரேன்…
நீ காவல்காரன்தானே…

ஆண் : ராக்குயிலே…
பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம்…
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்…

ஆண் : ராக்குயிலே…
பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம்…
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்…

ஆண் : ராக்குயிலே…
பெண் : ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…
ஆண் : ராக்குயிலே…
பெண் : ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…


Notes : Raakuyile Song Lyrics in Tamil. This Song from Puthiya Vaanam (1988). Song Lyrics penned by RV Udayakumar. ராக்குயிலே கண்ணுல பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top