பூக்களை கிள்ளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியாசின் நிசார்அரோல் கோரெல்லிபசங்க 2

Pookkalai Killi Vandhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூக்களை கிள்ளி வந்து இங்கே போட்டது யார்…
புன்னகை போதுமென்று இங்கே சொன்னது யார்…

ஆண் : தன் வேரும் மாறி நீரும் மாறி ஊரும் மாறியே…
எங்கனம் வாசம் வீசுவதோ…
வண்ணங்கள் நீக்கி விட்டால் எங்கனம் பேசுவதோ…
கண்ணாடி ஜாடிக்குள்ள எங்கனம் ஆடுவதோ…

ஆண் : தாய் பாசம் நீங்கி ஈரம் நீங்கி யாவும் நீங்கியே…
எந்திரம் போலே மாறுவதோ…

BGM

ஆண் : நேற்று கேட்ட கூச்சல் எல்லாம்…
மௌனமாகி கொள்கிறதே…
ஆட்டம் போட்ட கூடம் இன்று…
காலியாகி நிற்கிறதே…

ஆண் : தாயும் அங்கே தந்தை அங்கே…
ஏன் அநாதை போல இங்கே…

ஆண் : தன் கூடும் மாறி காடும் மாறி யாவும் மாறியே…
எங்கனம் இன்பம் சூடுவதோ…

ஆண் : பூக்களை கிள்ளி வந்து இங்கே போட்டது யார்…
புன்னகை போதுமென்று இங்கே சொன்னது யார்…

ஆண் : தன் வேரும் மாறி நீரும் மாறி ஊரும் மாறியே…
எங்கனம் வாசம் வீசுவதோ…
வண்ணங்கள் நீக்கி விட்டால் எங்கனம் பேசுவதோ…
கண்ணாடி ஜாடிக்குள்ள எங்கனம் ஆடுவதோ…

ஆண் : தாய் பாசம் நீங்கி ஈரம் நீங்கி யாவும் நீங்கியே…
எந்திரம் போலே மாறுவதோ…
தன் கூடும் மாறி காடும் மாறி யாவும் மாறியே…
எங்கனம் இன்பம் சூடுவதோ…


Notes : Pookkalai Killi Vandhu Song Lyrics in Tamil. This Song from Pasanga 2 (2015). Song Lyrics penned by Madhan Karky. பூக்களை கிள்ளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading