பிள்ளையார் சுழி போட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownசீர்காழி கோவிந்தராஜன்Unknownவிநாயகர் பாடல்கள்

Pillaiyar Suzhi Pottu Song Lyrics in Tamil


ஆண் : ஓரானைக்கன்றை உமையாள் திருமகனை…
போரானைக் கற்பகத்தைப் பேணினால்…
வாராத புத்தி வரும்… வித்தை வரும்…
உத்திர சம்பத்து வரும்…
சக்தி தரும்… சித்தி தரும்தான்…

BGM

ஆண் : பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து…
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…

BGM

ஆண் : அழியாத பெருஞ்செல்வம் அவனே…
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே…
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…

BGM

ஆண் : வழியின்றி வேலனவன் திகைத்தான்…
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்…
வழியின்றி வேலனவன் திகைத்தான்…
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்…

ஆண் : மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்…
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்…
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்…
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு…

BGM

ஆண் : கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை…
அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை…
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்…
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்…
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…

BGM

ஆண் : தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்…
வரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும்…
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்…
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும்…
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும்…

ஆண் : பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து…
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…


Notes : Pillaiyar Suzhi Pottu Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Unknown. பிள்ளையார் சுழி போட்டு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top