பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | கே.பி. சுந்தராம்பாள் | கே.வி. மகாதேவன் | திருவிளையாடல் |
Pazham Neeyappa Song Lyrics in Tamil
பெண் : பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா…
தமிழ் ஞானப்பழம் நீயப்பா…
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா…
தமிழ் ஞானப்பழம் நீயப்பா…
பெண் : சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி…
புலவோர்க்குப் பொருள் கூறும்…
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா…
தமிழ் ஞானப் பழம் நீயப்பா…
—BGM—
பெண் : கண்ணொன்றில் கனலாய் வந்தாய்…
நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்…
ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்…
ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்…
பெண் : கார்த்திகைப் பெண்பால் உண்டாய்…
திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்…
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்த்த…
தமிழ் ஞானப் பழம் நீயப்பா…
—BGM—
பெண் : ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு…
உற்றார் பெற்றாரும் உண்டு…
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு…
உற்றார் பெற்றாரும் உண்டு…
பெண் : நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்…
நீ வாழ இடமும் உண்டு…
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்…
நீ வாழ இடமும் உண்டு…
பெண் : தாயுண்டு மனம் உண்டு…
தாயுண்டு மனம் உண்டு…
அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு…
உன் தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின்…
தமிழுக்கு உரிமை உண்டு…
—BGM—
பெண் : ஆறுவது சினம் கூறுவது தமிழ்…
அறியாத சிறுவனா நீ…
ஆறுவது சினம் கூறுவது தமிழ்…
அறியாத சிறுவனா நீ…
பெண் : மாறுவது மனம் சேருவது இனம்…
தெரியாத முருகனா நீ…
மாறுவது மனம் சேருவது இனம்…
தெரியாத முருகனா நீ…
பெண் : ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு…
ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு…
இன்முகம் காட்டவா நீ…
பெண் : ஏற்றுக்கொள்வாய் கூட்டிச் செல்வேன்…
என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ…
Notes : Pazham Neeyappa Song Lyrics in Tamil. This Song from Thiruvilayadal (1965). Song Lyrics penned by Kannadasan. பழம் நீயப்பா பாடல் வரிகள்.