பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | கே.எஸ். சித்ரா & மனோ | கார்த்திக் ராஜா | பாண்டியன் |
Pandiyanin Rajiyathil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா…
கையில் தந்தேன் கல்யாணமாலை…
மையல் கொண்டேன் நான் இந்த வேளை…
பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா…
கையில் தந்தாய் கல்யாணமாலை…
மையல் கொண்டேன் நான் இந்த வேளை…
ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
—BGM—
ஆண் : நீ சிரிக்க நான் அணைக்க…
பூ மணக்க தேன் கொடுக்க…
பெண் : தேன் கொடுத்து நீ எடுக்க…
நாள் முழுதும் நான் மயங்க…
ஆண் : பார் கடல் போலேதான் நீயிருக்க…
பாய்மரக் கலம் போலே நான் மிதக்க…
பெண் : ராத்திரி தூங்காமல் நான் தவிக்க…
ராஜனின் லீலைகள் நோய் தணிக்க…
ஆண் : வெட்கம் தீர நான் உன்னைச் சேர…
தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ… ஓஹோ…
பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா…
ஆண் : கையில் தந்தேன் கல்யாணமாலை…
மையல் கொண்டேன் நான் இந்த வேளை…
பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
—BGM—
பெண் : மன்னவனுக்கும் மன்னவனே…
என் மனதின் நாயகனே…
ஆண் : என்னழகு கண்ணின் மணி…
உன்னழகு பொன்னின் மணி…
பெண் : வான் மழை மேகங்கள் நீர்த் தெளிக்க…
வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க…
ஆண் : வாலிப ராகங்கள் நான் படிக்க…
நூலிடை தாளாமல் நீ துடிக்க…
பெண் : சின்னப் பூவை தேன் வெண்ணிலாவை…
தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ…
ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா…
கையில் தந்தேன் கல்யாணமாலை…
மையல் கொண்டேன் நான் இந்த வேளை…
பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா…
கையில் தந்தாய் கல்யாணமாலை…
மையல் கொண்டேன் நான் இந்த வேளை…
ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
—BGM—
Notes : Pandiyanin Rajiyathil Song Lyrics in Tamil. This Song from Pandiyan (1992). Song Lyrics penned by Panchu Arunachalam. பாண்டியனின் ராஜ்ஜியத்தில் பாடல் வரிகள்.