| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | கே.எஸ். சித்ரா & மனோ | இளையராஜா | பாண்டியன் |
Anbe Nee Enna Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ…
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ…
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ…
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ…
பெண் : கண்கள் கவர்ந்து நிற்கும் விண் ஆளும் இந்திரனோ…
பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ…
சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ…
பெண் : அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ…
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ…
—BGM—
பெண் : வஞ்சிப் பெண் ஆசைக் கொள்ளும் கட்டழகா…
வைகை நீராட வந்த கள்ளழகா…
தேக்காலே சிற்பி செய்த தோலழகா…
தோகைக்கு மோகம் தந்த ஆளழகா…
பெண் : நீங்காமல் இருப்பேன் நீ தான் அணைத்தால்…
நாணாமல் கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்…
ஆசை பெருகுதையா இடையினில் ஆடை நழுவுதையா…
மேனி உருகுதையா மனதினில் மோகம் வளருதையா…
பெண் : அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ…
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ…
பெண் : கண்கள் கவர்ந்து நிற்கும் விண் ஆளும் இந்திரனோ…
பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ…
சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ…
பெண் : அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ…
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ…
—BGM—
பெண் : அம்மாடி போட்டதென்ன சொக்குப் பொடி…
என்னாகும் பாவம் இந்த சின்னக் கொடி…
பொன்னான கையை கொஞ்சம் தொட்டுப்பிடி…
சிங்கார ராகம் வைத்து மெட்டுப்படி…
பெண் : தாளாத மயக்கம் தோன்றும் எனக்கு…
நான் கொண்ட எதையும் தந்தேன் உனக்கு…
பாவை உதடுகளில் உனக்கென பாலும் வடிகிறது…
காதல் நினைவுகளில் குளிர் தரும் காற்றும் சுடுகிறது…
ஆண் : அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ…
மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ…
ஆண் : கண்கள் கவர்ந்து நிற்கும் கண்ணான கண்மணியோ…
காலை மனம் மயங்கும் பொன்னான பெண்மணியோ…
சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பைங்கிளியோ…
ஆண் : அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ…
மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ…
அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ…
மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ…
Notes : Anbe Nee Enna Song Lyrics in Tamil. This Song from Pandiyan (1992). Song Lyrics penned by Vaali. அன்பே நீ என்ன பாடல் வரிகள்.
