பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | யுவன் ஷங்கர் ராஜா | யுவன் ஷங்கர் ராஜா | புதுப்பேட்டை |
Oru Naalil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு நாளில் வாழ்க்கை இங்கே…
எங்கும் ஓடி போகாது…
மறு நாளும் வந்துவிட்டால்…
துன்பம் தேயும் தொடராது…
ஆண் : எத்தனை கோடி கண்ணீர்…
மண் மீது விழுந்திருக்கும்…
அத்தனை கண்ட பின்பும்…
பூமி இங்கு பூ பூக்கும்…
ஆண் : ஹோ ஹோ ஹோவ்…
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு…
ஹோ ஹோ ஹோவ்…
ஒரு வாசல் தேடியே விளையாட்டு…
ஹோ ஹோ ஹோவ்…
கண் திறந்து பார்த்தால் பல கூத்து…
ஹோ ஹோ ஹோவ்…
கண் மூடிக்கொண்டால்…
—BGM—
ஆண் : போர்க்களத்தில் பிறந்துவிட்டோம்…
வந்தவை போனவை வருத்தம் இல்லை…
காட்டினிலே வாழ்கின்றோம்…
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை…
ஆண் : இருட்டினிலே நீ நடக்கையிலே…
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்…
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே…
உனக்கு துணை என்று விளங்கிவிடும்…
ஆண் : தீயோடு போகும் வரையில்…
தீராது இந்த தனிமை…
கரை வரும் நேரம் பார்த்து…
கப்பலில் காத்திருப்போம்…
எரிமலை வந்தால் கூட…
ஏறி நின்று போர் தொடுப்போம்…
ஆண் : ஹோ ஹோ ஹோவ்…
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே…
ஹோ ஹோ ஹோவ்…
இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே…
ஹோ ஹோ ஹோவ்…
மனம் வெட்டவெளியிலே அலைகிறதே…
ஹோ ஹோ ஹோவ்…
அந்த கடவுளை கண்டால்…
—BGM—
ஆண் : அது உனக்கு இது எனக்கு…
இதயங்கள் போடும் தனி கணக்கு…
அவள் எனக்கு இவள் உனக்கு…
உடல்களும் போடும் புதிர் கணக்கு…
ஆண் : உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை…
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்…
நல்லவன் யார் அட கெட்டவன் யார்…
கடைசியில் அவனே முடிவு செய்வான்…
ஆண் : பழிபோடும் உலகம் இங்கே…
பலியான உயிர்கள் எங்கே…
உலகத்தின் ஓரம் நின்று…
அத்தனையும் பார்த்திருப்போம்…
நடப்பவை நாடகமென்று…
நாமும் சேர்த்து நடித்திருப்போம்…
ஆண் : ஹோ ஹோ ஹோவ்…
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்
ஹோ ஹோ ஹோவ்…
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்…
ஹோ ஹோ ஹோவ்…
கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்…
ஹோ ஹோ ஹோவ்…
மறுபிறவி வேண்டுமா…
—BGM—
Notes : Oru Naalil Song Lyrics in Tamil. This Song from Pudhupettai (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு நாளில் பாடல் வரிகள்.