பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன் | இளையராஜா | புதுமைப் பெண் |
Oh Oru Thendral Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஓ… ஒரு தென்றல் புயலாகி வருமே…
ஓ… ஒரு தெய்வம் படி தாண்டி வருமே…
ஆண் : கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
ஆண் : ஓ… ஒரு தென்றல் புயலாகி வருமே…
—BGM—
ஆண் : அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும்…
அது பெண்ணின் தொழில் இல்லையே…
சரித்திரம் படைக்கவும் தரித்திரம் துடைக்கவும்…
வருவதில் பிழை இல்லையே…
ஆண் : அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும்…
அது பெண்ணின் தொழில் இல்லையே…
சரித்திரம் படைக்கவும் தரித்திரம் துடைக்கவும்…
வருவதில் பிழை இல்லையே…
ஆண் : சுற்றம் என்ன சொன்னாலும்…
தூய்மை ஒன்றுதான் சொந்தம்…
காவல் காக்கும் எந்நாளும்…
கற்பு என்னும் தீப்பந்தம்…
ஆண் : இரவும் பகலும் வியர்வை வழிய…
கரைகிறதே ரத்தம்…
ஆண் : ஓ… ஒரு தென்றல் புயலாகி வருமே…
ஓ… ஒரு தெய்வம் படி தாண்டி வருமே…
ஆண் : கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
—BGM—
ஆண் : நிலவினில் இருக்கின்ற களங்கத்தை இவளது…
பெருவிரல் துடைத்து விடும்…
புதுயுக மகள் இவள் அணிகின்ற வளையல்கள்…
சிறைகளை உடைத்து விடும்…
ஆண் : நிலவினில் இருக்கின்ற களங்கத்தை இவளது…
பெருவிரல் துடைத்து விடும்…
புதுயுக மகள் இவள் அணிகின்ற வளையல்கள்…
சிறைகளை உடைத்து விடும்…
ஆண் : பாரிஜாத பூம்பாவை பாதியாகி போனாளே…
தேகம் எங்கும் புண்ணாகி தேதி போல தேய்ந்தாளே…
செடியை பிரிந்த பிறகும் செடிக்கு உயிர் தருதே பூவே…
ஆண் : ஓ… ஒரு தென்றல் புயலாகி வருமே…
ஓ… ஒரு தெய்வம் படி தாண்டி வருமே…
ஆண் : கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
Notes : Oh Oru Thendral Song Lyrics in Tamil. This Song from Pudhumai Penn (1984). Song Lyrics penned by Vairamuthu. ஓ ஒரு தென்றல் புயலாகி பாடல் வரிகள்.