பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன் | இளையராஜா | புதுமைப் பெண் |
Kasthoori Maanae Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…
பெண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…
பெண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…
—BGM—
ஆண் : கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது…
கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு…
பெண் : கன்னம் பூம்பட்டு வெட்கத்தை நீ தொட்டு…
நெற்றிப் பொட்டொன்று வைத்துக் கொள்ளு…
ஆண் : பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும்…
அருந்த நேரம் சொல்லு…
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும்…
அருந்த நேரம் சொல்லு…
பெண் : பெண்மையே பேசுமா…
பெண்மையே பேசுமா…
ஆண் : மெளனம்தான் பள்ளியறை மந்திரமா…
—BGM—
பெண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…
ஆண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…
ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…
—BGM—
பெண் : ஆஹா… பொன் முத்தம் ரத்தத்தில் ஏன் சத்தம்…
என்னை ஏதேதோ செய்கின்றதே…
ஆண் : வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல்…
இங்கே தேன் மாரி பெய்கின்றதே…
பெண் : என் தேகம் எங்கெங்கும்…
ஏதோ ஓர் பொன் மின்னல்…
—BGM—
பெண் : என் தேகம் எங்கெங்கும்…
ஏதோ ஓர் பொன் மின்னல்…
நடந்து போகின்றதே…
ஆண் : நாணமே போனது நாணமே போனது…
பெண் : போதுமே ஆளை விடு ஆடை கொடு…
ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…
பெண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…
ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…
Notes : Kasthoori Maanae Song Lyrics in Tamil. This Song from Pudhumai Penn (1984). Song Lyrics penned by Vairamuthu. கஸ்தூரி மானே பாடல் வரிகள்.