பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் | கே.வி.மகாதேவன் | என் அண்ணன் |
Nenjamundu Nermaiyundu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஹோய்… நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…
ஆண் : அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா…
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா…
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா…
ஆண் : ஹே… நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…
—BGM—
ஆண் : அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு…
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு…
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு…
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு…
ஆண் : கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு…
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு…
நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு… ஹோய்…
ஆண் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…
—BGM—
ஆண் : அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி…
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி…
அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி…
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி…
ஆண் : பொன்னான உலகென்று பெயருமிட்டால்…
பொன்னான உலகென்று பெயருமிட்டால்…
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்… ஹோய்…
ஆண் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…
—BGM—
ஆண் : உண்டு உண்டு என்று நம்பி காலை எடு…
இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு…
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு…
இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு…
ஆண் : ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து…
ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து…
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து…
ஆண் : ஹோய்… நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…
ஆண் : அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா…
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா…
ஆண் : ஹோய்… நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…
Notes : Nenjamundu Nermaiyundu Song Lyrics in Tamil. This Song from En Annan (1970). Song Lyrics penned by Kannadasan. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு பாடல் வரிகள்.