பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கார்த்திக் நேதா | சித் ஸ்ரீராம் | கிரிஷ் கோபாலகிருஷ்ணன் | கொலை |
Neerkumizho Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நீர்குமிழோ…
நெடுங்கனவோ…
தீயினில் விழும் பொன்தூறல்…
இவ்வாழ்வோ…
ஆண் : ஏன் பிரிவோ…
எது முடிவோ…
நீரின் மூழ்கும் மண்பொம்மைகள்…
நாமோ…
ஆண் : ஓசை இல்லாமல்…
உறவும் இல்லாமல்…
ஊமை என் நெஞ்சின்…
தாலாட்டும் நீயோ…
ஆண் : தூதும் இல்லாமல்…
தனிமை தாங்காமல்…
கூண்டுக்குள் மூச்சுவிடும்…
தென்றல் நீயோ…
ஆண் : தீராத காற்றில்…
உனை மாறாத நேற்றில்…
அடைத்தேனே துடித்தேனே…
அழகே… ஓஓ… ஓஓ…
ஆண் : மாயாத நோக்கில்…
புயல் ஓயாத போக்கில்…
அலைந்தேனே குமைந்தேனே…
உயிரே… ஓஓ… ஓஓ…
—BGM—
ஆண் : யார் வலையோ…
எவர் இரையோ…
இரைச்சலின் உள்ளாடும்…
பாடல்கள் நாமோ…
ஆண் : யார் பிழையோ…
எது சரியோ…
கானலின் நீருக்குள்…
விண் மீன்கள் நாமோ…
ஆண் : வானம் செல்ல…
நீயும் கேட்டாயே…
அன்பெனும் தூண்டில் தனில்…
நான் உன்னை மாட்டி வைத்தேன்…
ஆண் : விடுதலை கேட்கிறாய்…
வலியுடன் பார்கிறாய்…
எதை எதை நான் நான் செய்ய…
ஆண் : தீராத காற்றில்…
உனை மாறாத நேற்றில்…
அடைத்தேனே துடித்தேனே…
அழகே… ஓஓ… ஓஓ…
ஆண் : மாயாத நோக்கில்…
புயல் ஓயாத போக்கில்…
அலைந்தேனே குமைந்தேனே…
உயிரே… ஓஓ… ஓஓ…
ஓஓ.. ஓஓ… ஓஓ.. ஓஓ…
ஆண் : பேர் இசையே…
பெரு நிலையே…
ஈரங்கள் காயாத ஏகாந்தங்கள் நீயே…
ஆண் : மீ மிசையே…
மிகுமதியே…
மார்பினில் மாறாத வாசங்கள் நீயே…
ஆண் : பேர் இசையே…
பெரு நிலையே…
ஈரங்கள் காயாத ஏகாந்தங்கள் நீயே…
ஆண் : மீ மிசையே…
மிகுமதியே…
மார்பினில் மாறாத வாசங்கள் நீயே…
ஆண் : காரிருள் மேலே…
விழும் சீர் ஒளி நீயே…
உணர்ந்தேனே உணர்ந்தேனே…
உயிரே… ஓஓ… ஓஓ…
Notes : Neerkumizho Song Lyrics in Tamil. This Song from Kolai (2023). Song Lyrics penned by Karthik Netha. நீர்குமிழோ பாடல் வரிகள்.