நீராம்பல் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅர்ஜுன் மேனன் & எம்.சி. விக்கிஹாரிஸ் ஜெயராஜ்நண்பேன்டா

Neeraambal Poovae Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீராம்பல் பூவே நீராம்பல் பூவே…
மின்சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனே…
நெஞ்சத்தில் நீயே நச்சென்றுதானே…
நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே…

ஆண் : கால் கொண்ட மின்னல்…
கணுவில்லா கண்ணல்…
காதோரம் கூந்தல் காற்றை ஆளை அள்ளாதோ…

ஆண் : நிழலின்ற கண்கள்…
நீரில்லா மீன்கள்…
தூண்டிலாய்தாமே மாறி என்னை கொல்லாதோ

ஆண் : ஏனோ தோணுது பெண்ணே…
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி…

குழு : ஜிடிகிடி பிஜிடி பாக்…
ஜிடிகிடி பிஜிடி பாக்… யா…

ஆண் : ஏனோ தோணுது பெண்ணே…
என் ஒரு வழிப் பாதையே உன் இருவிழிதானடி…
குழு : யா யா யா…

BGM

ஆண் : யார் அந்தப் பெண்ணோ…
யார் பெற்ற பெண்ணோ…
அவளோடு சேர்ந்து போக இப்படி தவிக்கின்றாய்…

ஆண் : அவள் மட்டும் தூங்கி…
என் தூக்கம் வாங்கி…
எப்போதும் போலே வாழ்ந்தால் நியாயம் இல்லையே…

ஆண் : நான் மட்டும் ஏங்கி…
என் வீட்டை நீங்கி…
பின்னாலே வந்தால் என்ன செய்வாள் கள்ளியே…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி…
ஆண் : யா யா யா…

ஆண் : அந்த பிரம்மன் படைத்த…
அழகான பெண்ணோ…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
என் ஒரு வழிப் பாதையே…
கம் ஆன்… உன் இருவிழிதானடி…

ஆண் : இவள் கண்கள் பாத்த போதும்…
மயக்கம் வருது டோய்…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி…

ஆண் : கொஞ்சம் கொஞ்சம் திரும்பி பாரு பொண்ணே…
கொறஞ்சி போக மாட்ட…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
என் ஒரு வழிப் பாதையே உன் இருவிழிதானடி…

ஆண் : யா யா யா… எங்க போனாலும்…
என்ன இழுத்துட்டு போறியே…


Notes : Neeraambal Poovae Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Thamarai. நீராம்பல் பூவே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top