பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
அறிவுமதி | ஹரிஹரன் | சிற்பி | மூவேந்தர் |
Naan Vaanavillaye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன்…
அதைக் காணவில்லையே வேர்த்தேன்…
நான் வானவில்லையே பார்த்தேன்…
அதைக் காணவில்லையே வேர்த்தேன்…
ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை…
ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன்…
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்…
ஓஹோ… ஓஓஓஓ…
—BGM—
ஆண் : கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன…
மயிலும் நடனமிடுமோ…
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ…
இரு கண்கள் ஆகிவிடுமோ…
ஆண் : தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி…
தேனில் செய்த இதழ்… ஓஓஓ…
மூடி வைத்த முயல்…
மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ…
ஆண் : பகல் நேரம் நிலவைப் பார்த்தது…
நானடி கண்ணம்மா…
முந்தானை வாசம் வந்தது…
ஆறுதல் சொல்லம்மா…
ஆண் : விழி கண்டவள் கண்டிட…
கெஞ்சுது நெஞ்சது…
கொஞ்சம் நில்லம்மா…
ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன்…
அதைக் காணவில்லையே வேர்த்தேன்…
ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்…
வீசச் சொல்லியா கேட்டேன்…
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்…
—BGM—
ஆண் : சேலை சூடி ஒரு…
சோலை போல வழி…
பூக்கள் சிந்தி விழுமோ…
ஆண் : பாறையான மனம் ஈரமானதடி…
பார்வை தந்த வரமோ…
பாதம் பட்ட இடம் சூடு கண்டு…
உன்னை நானும் கண்டு விடுவேன்…
ஆண் : காதலான மழை சாரல் தூவி விட…
மார்பில் ஒதுங்கி விடுவேன்…
ஆண் : பொய் மானைத் தேடி சென்றது…
ராமனின் கண்ணம்மா…
மெய் மானைத் தேடச் சொன்னது…
மாரனின் நெஞ்சம்மா…
ஆண் : விழி கண்டவள் கண்டிட…
கெஞ்சுது நெஞ்சது…
கொஞ்சம் நில்லம்மா…
ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன்…
அதைக் காணவில்லையே வேர்த்தேன்…
ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்…
வீசச் சொல்லியா கேட்டேன்…
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்…
—BGM—
Notes : Naan Vaanavillaye Song Lyrics in Tamil. This Song from Moovendar (1998). Song Lyrics penned by Arivumathi. நான் வானவில்லையே பார்த்தேன் பாடல் வரிகள்.