பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | தேவா | சாமுண்டி |
Muthu Nagai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
பெண் : கண் இரண்டும் மயங்கிட…
கன்னி மயில் உறங்கிட…
நான்தான் பாட்டெடுப்பேன்…
உன்னை தாய் போல் காத்திருப்பேன்…
ஆண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள்…
வாழும் தொடர் கதைதான்…
உந்தன் தேசம் வளர் பிறைதான்…
பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
—BGM—
பெண் : உன்ன பாத்து ஆசபட்டேன்…
அத பாட்டில் சொல்லிபுட்டேன்…
நீயும் தொட நானும் தொட…
நாணம் அது கூச்சமிட…
அட்டை போல் ஒட்டி இருப்பேன்…
ஆண் : இந்த காதல் பொல்லாதது…
ஒரு காவல் இல்லாதது…
ஊத காத்து வஞ்சி மாது…
ஒத்தையில வரும் போது…
போர்வை போல பொத்தி அணைப்பேன்…
பெண் : ஆறு ஏழு நாளாச்சி விழி மூடி…
அடி ஆத்தாடி அம்மாடி உன்னை தேடி…
ஆண் : நீதானே மானே என் இளஞ்ஜோடி…
உன்னை நீங்காது என்றும் என் உயிர் நாடி…
பெண் : நித்தம் தவித்தேன்…
நீ வரும் வரைக்கும்…
ஆண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
—BGM—
ஆண் : புள்ளி மானு பெண்ணானதா…
கெண்ட மீனு கண்ணானதா…
பூ முடிச்சி பொட்டு வச்சி…
புன்னகையில் தேன் தெளிச்சு…
பக்கம் ஒரு சொர்க்கம் வருதா…
பெண் : அட வாயா கைய தொடு…
பள்ளி பாடம் கத்து கொடு…
ஆவணியில் பூபடைஞ்சு தாவணிய போட்டுகிட்ட…
சின்ன பொண்ணு ஆசை விடுதா…
ஆண் : ஆவாரம் பூவாக விடுவேனா…
ஒரு அச்சாரம் வெய்காம இருப்பேனா…
பெண் : தேனாறும் பாலாறும் கலந்தாச்சி…
அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு…
ஆண் : என்ன படச்சான்…
நீ துணை வரத்தான்…
பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
பெண் : கண் இரண்டும் மயங்கிட…
கன்னி மயில் உறங்கிட…
நான் தான் பாட்டெடுப்பேன்…
உன்னை தாய் போல் காத்திருப்பேன்…
பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
Notes : Muthu Nagai Song Lyrics in Tamil. This Song from Samundi (1992). Song Lyrics penned by Vaali. முத்து நகையே பாடல் வரிகள்.