முதல்முறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சுஜாதா மோகன்ஏ.ஆர்.ரகுமான்சங்கமம்

Mudhal Murai Song Lyrics in Tamil


பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்…
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்…
எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி…
மறுமுறை உயிா் கொண்டேன்…
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்…

BGM

பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்…
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்…
எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி…
மறுமுறை உயிா் கொண்டேன்…
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்…

பெண் : முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும் ஏன்…
கண்ணீருண்டு சோகமில்லை…
ஆமாம் மழையுண்டு மேகமில்லை…

BGM

பெண் : கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி…
அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன…

ஆண் : சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்…
பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன…

பெண் : விதையொன்று உயிா் கொள்ள…
வெப்பக்காற்று ஈரம் வேண்டும்…
காதல் வந்து உயிா் கொள்ள காலம் கூட வேண்டும்…

ஆண் : ஒரு விதை உயிா் கொண்டது…
ஆனால் இரு நெஞ்சில் வோ் கொண்டது…

ஆண் : சலங்கையே கொஞ்சம் பேசு…
மௌனமே பாடல் பாடு…
மொழியெல்லாம் ஊமையானால் கண்ணீா் உரையாடும்…
அதில் கவிதை அரங்கேறும்…

BGM

பெண் : பாதையும் தூரம் நான் ஒரு பாரம்…
என்னை உன் எல்லை வரை கொண்டு செல்வாயா…

ஆண் : உடலுக்குள் இருக்கும் உயிா் ஒரு சுமையா…
பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா…

பெண் : தந்தை தந்த உயிா் தந்தேன்…
தாய் தந்த உடல் தந்தேன்…
உறவுகள் எல்லாம் சோ்த்து உன்னிடம் கண்டேன்…

ஆண் : மொத்தத்தையும் நீ கொடுத்தாய்…
ஆனால் முத்தத்துக்கோா் நாள் குறித்தாய்…

BGM

பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்…
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்…
எந்தன் தாயின் கா்ப்பம்தாண்டி…
மறுமுறை உயிா் கொண்டேன்…
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்…

பெண் : முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும் ஏன்…
கண்ணீருண்டு சோகமில்லை…
ஆமாம் மழையுண்டு மேகமில்லை…


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Sangamam (1999). Song Lyrics penned by Vairamuthu. முதல்முறை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top