பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | ஹரிஹரன் | சிற்பி | ராசி |
Poomalai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகுதே…
காதலின் தாகத்தில் கண்கள் ஈரம் ஆகுதே…
யார் தந்த சாபமோ நீ சொல்லு உயிரே…
ஆண் : பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகுதே…
காதலின் தாகத்தில் கண்கள் ஈரம் ஆகுதே…
யார் தந்த சாபமோ நீ சொல்லு உயிரே…
ஆண் : திசையேதும் தெரியாமல் விழும் மேகம் போல் ஆனேன்…
உன் வளையல் துண்டுகளாய் நான் உடைந்து தூள் ஆனேன்…
யார் தந்த சாபமோ நீ சொல்லு உயிரே…
—BGM—
ஆண் : நீ தந்த நேசம் கண்ணுக்குள் நீந்தியது…
தாய் தந்த பாசம் இமையாக மாறியது…
கண்ணுக்கிங்கே இமைகள் ஆனது என்ன சுமைகள்…
பாசம் எல்லாம் இங்கே வெட்ட வெளி சிறைகள்…
சோகங்களை சொல்ல மொழி ஒன்றும் இல்லை… ஓஓஓ…
ஆண் : உன் காதல் முத்தத்தில் நான் கன்னம் நனைந்தேன்…
தாய் பாலின் ஈரத்தில் என் உள்ளம் கரைந்தேன்…
யார் பக்கம் நியாயமோ நீ சொல்லு உயிரே…
ஆண் : பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகுதே…
காதலின் தாகத்தில் கண்கள் ஈரம் ஆகுதே…
யார் தந்த சாபமோ நீ சொல்லு உயிரே…
—BGM—
ஆண் : கண்ணீரின் ஈரம் கன்னத்தில் காயாதா…
முந்தானை ஓரம் கைக்குட்டை ஆகாதா…
உள்ளம் என்ற ஒன்று உன்னை சேரும் வேளை…
தாயின் கைகள் தடுத்தால் என்ன செய்வேன் ஏழை…
உண்மை சொல்லப் போனால் நானே எனக்கில்லை… ஓஓஓ…
ஆண் : அடி பாசக் கூண்டுக்குள் நான் மாட்டிக் கொண்டேனா…
என் வாழ்க்கைக் கோப்பைக்குள் விசம் ஊற்றிக் கொண்டேனா…
யார் தந்த சாபமோ நீ சொல்லு உயிரே…
ஆண் : பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகுதே…
காதலின் தாகத்தில் கண்கள் ஈரம் ஆகுதே…
யார் தந்த சாபமோ நீ சொல்லு உயிரே…
Notes : Poomalai Song Lyrics in Tamil. This Song from Raasi (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. பூமாலை பாடல் வரிகள்.