முதல்முறை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஜித்தின் ராஜ்யுவன் ஷங்கர் ராஜாஇரும்புத்திரை

Mudhal Murai Song Lyrics in Tamil


ஆண் : ஓஹோ… முதல்முறை மழை பார்க்கும்…
பிள்ளையை போல் நானே…
விழி விரிந்திட பார்த்தேனே…
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே…

ஆண் : இது வரை சுவை தீட்டும்…
நொடிகளை தோற்றேனே…
அவள் திருத்திட பூத்தேனே…
புது புலன்களை சேர்த்தேனே…

ஆண் : கரை பட்ட ஓட்டை தொட்டி…
தினம் பார்த்து தாண்டி சென்றேன்…
அது வாசல் பூவை ஏந்தி…
உயிர் தாங்க இன்றே கண்டேன்…

ஆண் : மனதோடு நேசம் பேசும் கண்கள்…
நமக்கென்றே நிற்கும் கால்கள்…
நம் தோளை தட்டும் கைகள்…

ஆண் : சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள்…
இனி சுகம் மட்டும் என்றாக்கினாள்…
நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள்…
நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்…

BGM

ஆண் : ஏன் தோன்றினேன் வாழ்கிறேன்…
உணர்ந்து கொள்ள நேரம் இன்றி…
ஓடினேன் ஓடோடினேன்…
ஏன் என்னை மாற்றினாள்…

ஆண் : என் கோபமும் காயமும்…
தூர வீசி காயும் நெஞ்சில்…
ஈரம் பூசி தூசி நீக்கி தூய்மை ஆக்கினாள்…

ஆண் : ஏன் வாழ்வில் ஓரமாய் ஓயாத பேரலை…
அணையாத காற்றிலே அன்பின்று நேரலை…

ஆண் : சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள்…
இனி சுகம் மட்டும் என்றாக்கினாள்…
நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள்…
நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்…

BGM

ஆண் : முதல்முறை மழை பார்க்கும்…
பிள்ளையை போல் நானே…
விழி விரிந்திட பார்த்தேனே…
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே…

ஆண் : இதுவரை சுவை தீட்டும்…
நொடிகளை தோற்றேனே…
அவள் திருத்திட பூத்தேனே…
புது புலன்களை சேர்த்தேனே… ஹேஹேஹே…


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Irumbu Thirai (2018). Song Lyrics penned by Vivek. முதல்முறை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top