| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மதன் கார்க்கி | யுவன் ஷங்கர் ராஜா & சித்தார்த் | யுவன் ஷங்கர் ராஜா | ஏழு கடல் ஏழு மலை |
Marubadi Nee Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : போர் ஏதும் இல்லை வேறேதும் இல்லை…
ஆனாலும் பூமி அதிர்வது ஏன் சொல்லடி…
விண்மீன்கள் இல்லை நிலாவும் இல்லை…
ஆனாலும் வானம் ஒளிர்வது ஏன் சொல்லடி…
ஆண் : இமைகளை மூடாமலே இருதயம் தான் பார்க்குதா…
இருபது கால் பாய்ச்சலில் இரு விழியும் ஓடுதா…
மறுபடி நீ மறுபடி நீ…
ஆண் : போர் ஏதும் இல்லை வேறேதும் இல்லை…
ஆனாலும் பூமி அதிர்வது ஏன் சொல்லடி…
விண்மீன்கள் இல்லை நிலாவும் இல்லை…
ஆனாலும் வானம் ஒளிர்வது ஏன் சொல்லடி…
—BGM—
ஆண் : அதிகாலை கதிராகவே உதித்தாயே புதிதாக்கவே…
உன்னாலே விடிவொன்று என்னில் பெண்ணே…
தடமில்லா மணலாகவோ அலையில்லா புனலாகவோ…
வாழ்ந்தேனே நீ பாதம் வைக்கும் முன்னே…
ஆண் : பேரலையாய் எந்தன் வானத்தின்…
நாணம் தீண்ட வந்தாயா…
கார் முகிலாய் எந்தன் நெஞ்சத்தின்…
ஆழம் தாண்ட வந்தாயா…
ஆண் : காற்று என என்னை நீ…
தூய்மை செய்து ஓடி போவாயா…
காயம் என எப்போதும்…
நீ என் தோழி ஆவாயா…
ஆண் : கேள்விக் கொக்கியில் மாட்டிக்கொண்ட நீ…
எந்தன் பூமியில் மறுபடி நீ மறுபடி நீ…
—BGM—
ஆண் : பிரிந்தாலும் பிரியாமலே…
ஒரு பூவும் உதிராமலே…
என் நெஞ்சின் காடெங்கும் என்றும் நீயே…
ஆண் : யுகம் எல்லாம் கடந்தாலுமே…
தனியாய் நான் நடந்தாலுமே…
என் தீயின் நிழலாக என்றும் நீயே…
ஆண் : வாசனைகள் கோடி…
என் வானில் வீச மூச்சிழந்தேனே…
உன் வரவின் ஒற்றை…
வாசத்துக்காக காத்திருந்தேனே…
ஆண் : சுவாசம் என உன்னை நான்…
உட்கொள்ளும் செய்கை மீமிகை இல்லை…
காதல் என நான் உன்னை சொன்னால்…
நியாயமும் இல்லை…
ஆண் : சொல்லில் சிக்கிடா அர்த்தம் போல நீ…
கண்ணில் சிக்கினாய் மறுபடி நீ மறுபடி நீ…
Notes : Marubadi Nee Song Lyrics in Tamil. This Song from Yezhu Kadal Yezhu Malai (2024). Song Lyrics penned by Madhan Karky. மறுபடி நீ பாடல் வரிகள்.
