பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ்.பி.பி. சரண் & சுமங்கலி | தேவி ஸ்ரீ பிரசாத் | மழை |
Mannile Mannile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மண்ணிலே மண்ணிலே…
வந்து உடையுது வானம்…
பெண் : மழையிலே கரையுதே…
ரெண்டு மனங்களின் தூரம்…
ஆண் : காதில் கேட்கும் இடி ஓசை…
காதல் நெஞ்சின் பரிபாஷை…
பெண் : மழையை போலே உறவாட…
மனதில் என்ன பேராசை…
ஆண் : நீரில் எழுதும் காதல் அழியும்…
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே…
ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…
ஆண் : மண்ணிலே மண்ணிலே…
வந்து உடையுது வானம்…
பெண் : மழையிலே கரையுதே…
ரெண்டு மனங்களின் தூரம்…
—BGM—
ஆண் : பூ சிதறிடும் மேகம்…
பொன் வானவில் வரைகிறதோ…
ஏழ் நிறங்களினால்…
நமக்கொரு மாலை செய்கிறதோ…
பெண் : வான் தாரகை எல்லாம்…
நீர் பூக்களின் தோரணமோ…
வான் தேவதைகள்…
ஆசிகள் கூறும் அச்சதையோ…
ஆண் : இத்தனை மழையிலும்…
இந்த நாணம் கரையவில்லை…
பெண் : கன்னி நான் நனையலாம்…
கற்பு நனைவதில்லை…
ஆண் : அடி மனிதனை விடவும்…
மழை துளி உயர்ந்தது…
இது வரை புரியவில்லை…
ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…
—BGM—
பெண் : நான் காதலை சொல்ல…
என் வாய் மொழி துணை இல்லையே…
தன் வார்த்தைகளால் மழை துளி…
என் மனம் சொல்லியதே…
ஆண் : முன் கோபுர அழகை…
உன் தாவணி மூடியதே…
உன் ரகசியத்தை…
மழை துளி அம்பலம் ஆக்கியதே…
பெண் : மழை விழும் பொழுதெல்லாம்…
என்னை வந்து சேர்வாயா…
ஆண் : காதலை சேர்ப்பதே…
மழையின் வேலையா…
பெண் : அட மலர்களில் மழை விழும்…
வேர்களில் வெயில் விழும்…
அதிசயம் அறிவாயா…
ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…
—BGM—
ஆண் : மண்ணிலே மண்ணிலே…
வந்து உடையுது வானம்…
பெண் : மழையிலே கரையுதே…
ரெண்டு மனங்களின் தூரம்…
ஆண் : காதில் கேட்கும் இடி ஓசை…
காதல் நெஞ்சின் பரிபாஷை…
பெண் : மழையை போலே உறவாட…
மனதில் என்ன பேராசை…
ஆண் : நீரில் எழுதும் காதல் அழியும்…
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே…
ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…
Notes : Mannile Mannile Song Lyrics in Tamil. This Song from Mazhai (2005). Song Lyrics penned by Vairamuthu. மண்ணிலே மண்ணிலே பாடல் வரிகள்.