பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | வந்தனா ஸ்ரீனிவாசன் & வி. வி. பிரசன்னா | டி. இமான் | ரம்மி |
Koodamela Koodavechi Song Lyrics
ஆண் : கூட மேல கூட வச்சி
கூடலூரு போறவளே….
உன் கூட கொஞ்சம்
நானும் வாரேன்
கூட்டிகிட்டு போனா என்ன….
ஆண் : ஒத்தையில நீயும் போனா
அது நியாயமா உன்னுடனே
நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே
வாழ்வேனே ஆதாரமா……
ஆண் : நீ வேணான்னு சொன்னாலே
போவேன்டி சேதாரமா…..
பெண் : கூட மேல கூட வச்சு
கூடலூரு போறவள…..
நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன….
பெண் : ஒத்துமையா நாமும் போக
இது நேரமா….
பூவ தாள தேச்சி வச்ச
துரு ஈரமா…..
நான் போறேன்னு
சொல்லாம வாறேனே உன் தாரமா…..
பெண் : நீ தாயேன்னு கேட்காம
தாறேனே தாராளமா…….ஆ….ஆ…
—BGM—
பெண் : சாதத்துல கல்லு போல
நெஞ்சுக்குள்ள நீ இருந்து
சொிக்காம சதி பண்ணுற…
ஆண் : சீயக்காய போல
கண்ணில் சிக்கிகிட்ட
போதும் கூட உறுத்தாம
உயிா் கொல்லுற…..
பெண் : அதிகம் பேசாம
அளந்து நான் பேசி
எதுக்கு சடைபின்னுறேன்….
ஆண் : சல்லி வேர
ஆணி வேராக்குற….
சட்ட பூவ
வாசமா மாத்துற…..
பெண் : நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுறேன்……
ஆண் : கூட மேல கூட வச்சி
கூடலூரு போறவளே…
பெண் : நீ கூட்டிகிட்டு
போக சொன்னா
என்ன சொல்லும்
ஊரும் என்ன…
—BGM—
ஆண் : எங்கவேணா போயிகோ நீ
என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே….
பெண் : தண்ணியத்தான் விட்டு புட்டு
தாமரையும் போனதுன்னா
தரை மேல தல சாயுமே…..
ஆண் : மறைஞ்சு போனாலும்
மறந்து போகாத
நினைப்புதான் சொந்தமே….
பெண் : பட்ட தீட்ட தீட்ட தான்
தங்கமே…..
உன்ன பாக்க பாக்கத்தான்
இன்பமே….
ஆண் : நீ பாக்காம போனாலே
கிடையாதே மறு ஜென்மமே…
ஆண் : கூடமேல கூடவச்சி
கூடலூரு….
கூடலூரு போறவளே…
பெண் : நீ கூட்டிகிட்டு
போக சொன்னா என்ன
சொல்லும் ஊரும் என்ன…..
ஆண் : ஒத்தையில நீயும் போனா
அது நியாயமா…
உன்னுடனே நானும் வாரேன்
ஒரு ஓரமா…..
பெண் : நான் போறேன்னு
சொல்லாம வாறேனே
உன் தாரமா….
நீ தாயேன்னு கேட்காம…
தாறேனே தாராளமா…
—BGM—
Notes : Koodamela Koodavechi Song Lyrics in Tamil. This Song from Rummy (2014). Song Lyrics penned by Yugabharathi. கூட மேல கூட வச்சி பாடல் வரிகள்.