| பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| நா. முத்துக்குமார் | ரஞ்சித் & ரோஷினி | யுவன் ஷங்கர் ராஜா | தாமிரபரணி |
Karuppaana Kaiyale Song Lyrics in Tamil
பெண் : கருப்பான கையாலே என்ன புடிச்சான்…
காதல் என் காதல் பூ பூக்குதம்மா…
—BGM—
பெண் : கருப்பான கையாலே என்ன புடிச்சான்…
காதல் என் காதல் பூ பூக்குதம்மா…
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா…
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா…
அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா…
ஆண் : சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா…
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா…
அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா…
பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா…
இவள் காதல் இப்போ ஜோலியதான் காட்டுதம்மா… ஆஹான்…
பெண் : கருப்பான கையாலே என்ன புடிச்சான்…
காதல் என் காதல் பூ பூக்குதம்மா…
—BGM—
பெண் : வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு…
உன்னை பாா்த்தேனே…
அந்த ராவு கால நேரம் எனக்கு நல்ல நேரமே…
ஆண் : தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே…
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே…
பெண் : ஆத்துக்குள்ள மீன் பிடிக்க…
நீச்சல் தெரியணும்…
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க…
பாய்ச்சல் புரியணும்… அய்யா…
ஆண் : சிவப்பாக…
பெண் : ஆஹா…
ஆண் : இருப்பாளே…
பெண் : ஆமா…
ஆண் : சிவப்பாக… ஆ ஆ ஆ ஆ…
சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா…
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா…
—BGM—
ஆண் : ஓஓஓ… உருக்கி வச்ச இரும்பு போல…
உதடு உனக்கு…
அத நெருங்கும் போது கரண்டு போலே…
ஷாக்கு எனக்கு…
பெண் : ஹே… வெட்டும் புலி தீப்பெட்டிப் போல்…
கண்ணு உனக்கு…
நீ பாக்கும்போது பத்திக்கிச்சி…
மனசு எனக்கு…
ஆண் : பூமியிலே எத்தனையோ பூவு இருக்கு…
உன் பூப்போட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு…
யம்மா ஆத்தா… ஹே ஹேய்…
பெண் : கருகரு… கருப்பான கையாலே என்ன புடிச்சான்…
காதல் என் காதல் பூ பூக்குதம்மா…
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா…
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா…
ஆண் : இவ காதல் இப்போ ஜோலியதான் காட்டுதம்மா…
பெண் : ஹா ஹா… கருப்பான கையாலே என்ன புடிச்சான்…
காதல் என் காதல் பூ பூக்குதம்மா…
ஆண் : ஹே…
பெண் : பூக்குதம்மா…
ஆண் & பெண் : நன நன நானனனா…
பெண் : நன நன நானனனா…
Notes : Karuppaana Kaiyale Song Lyrics in Tamil. This Song from Thaamirabharani (2007). Song Lyrics penned by Na Muthukumar. கருப்பான கையாலே பாடல் வரிகள்.

