பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி | இளையராஜா | பூவிலங்கு |
Kannil Edho Minnal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…
தேகம் லேசா சூடாச்சு…
பெண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா…
வேர்வை வரும் முத்து முத்தா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…
ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…
—BGM—
பெண் : என்ன சொல்லி விளக்கு எனக்கிது புதுசு…
இடைவெளி இல்லாமே துடிக்குது மனசு…
ஆண் : காணாததைக் கண்ட உடம்பு நூலாச்சு…
இரு கண்ணுக்குள்ள தீ விழுந்தது போலாச்சு…
காணாததைக் கண்ட உடம்பு நூலாச்சு…
இரு கண்ணுக்குள்ள தீ விழுந்தது போலாச்சு…
இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தா என்னாவது…
ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…
—BGM—
ஆண் : நெத்தி வேர்வை நனைச்சு…
பொட்டுக் கொஞ்சம் அழியும்…
குங்குமத்துச் செவப்ப வெட்கம் போல வழியும்…
பெண் : அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ளே…
அட அடக் காக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ளே…
அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ளே…
அட அடக் காக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ளே…
பெண்மை இங்கே போட்டுக் கொள்ள தாழ்ப்பாள் இல்லே…
பெண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…
தேகம் லேசா சூடாச்சு…
ஆண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா…
வேர்வை வரும் முத்து முத்தா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…
பெண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
ஆண் : காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…
Notes : Kannil Edho Minnal Song Lyrics in Tamil. This Song from Poovilangu (1984). Song Lyrics penned by Vairamuthu. கண்ணில் ஏதோ பாடல் வரிகள்.