பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் | இளையராஜா | ஆட்டோராஜா |
Kanni Vannam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ…
பெண் : ஆஆஹா… தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…
தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…
தொடுவதில் மலர் இதழ்…
புண்ணாக வேண்டுமோ…
பெண் : தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…
—BGM—
ஆண் : மலரிதழில் சிறு பனித்துளிகள்…
முத்தாரம் தொடுக்கின்றன…
மையல் தரும் கையில்…
மாணிக்க கழுத்தோடு சூட்ட…
பெண் : மலையருவி தமிழ் கவி எழுதி…
வாழ்த்துக்கள் இசைக்கின்றது…
வாழ்த்தும் இசை பாட்டும்…
கல்யாண திருநாளைக் காட்ட…
ஆண் : மன்மதனின் அம்புகளை தாங்காமல்…
தூங்காமல் தள்ளாடும் காலம் எது… ஆஆ…
ஆண் : கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
பெண் : தொடுவதில் மலர் இதழ்…
புண்ணாக வேண்டுமோ…
தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…
—BGM—
ஆண் : மகவரியில் என் முகவரிகள்…
நான் கொஞ்சம் வரைந்தால் என்ன…
மாலை இந்த வேளை சந்திக்க…
கடிதங்கள் தீட்டும் …
பெண் : இலைமறைவாய் அதை எழுதிவிடு…
யாருக்கும் தெரியாமலே…
நீயும் மடல் போடு…
நான் கூறும் இடம் தன்னை கேட்டு…
ஆண் : தூரிகையும் காரிகையும் பூமேனி தாங்காது…
என் கையில் என்னாவது… ஆஆ…
பெண் : தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…
தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…
ஆண் : ஆஅ… மலர்கள் உன் வடிவிலே…
மாநாடு கூட்டுமோ…
—BGM—
Notes : Kanni Vannam Song Lyrics in Tamil. This Song from Auto Raja (1982). Song Lyrics penned by Pulamaipithan. கன்னி வண்ணம் பாடல் வரிகள்.