கண்ணழகே கண்ணழகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜ் கண்ணாசுஜாதா மோகன்தேவாகண்ணால் பேசவா

Kannazhage Song Lyrics in Tamil


பெண் : தன்னன்னானே தன்னேனானே…
தன்னன்னானே தன்னேனானே…
தானேனானே தானனனே தானேனானே தானனனே…

பெண் : கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…
கலை மானின் தோலழகே தமிழ் கம்பனின் பாட்டழகே…

பெண் : குயில் ஒன்னு நான் தரவா பாட்டோடு நீ தூங்க…
மயில் ஒன்னு நான் தரவா தோகை மேலே நீ தூங்க…

பெண் : மடிமேலே தாலாட்ட மகராணி வருவாளே…
தோள் மேலே சீராட்ட தென்றல் இவள் தருவாளே…

பெண் : கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…

BGM

பெண் : கோடை வெயிலினிலே குடைபிடித்துக் காத்திருப்பேன்… ஓஓ…
கொட்டும் மழையினிலே கண்ணிமைக்குள் உனை வைத்தேன்… ஓஓ…
வெள்ளி நிலவென்று கவி வடித்து சொன்னேனே… ஓஓ…
தூரம் நீ செல்ல மனம் துடித்து தவித்தேனே… ஓஓ…

பெண் : நெஞ்சமே நெஞ்சமே தினம் உயிரில் கலந்து மகிழ்வேன்…
ஜீவனே ஜீவனே மனம் திறந்து வாழ அழைத்தேன்…

பெண் : தாலாட்டு நான் பாட தனியாக நீ கேட்க…
நானாக தவம் இருப்பேன்…

பெண் : கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…

BGM

பெண் : வானம்பாடியாக மெட்டு சொல்லி கானம் எடுப்பேன்… ஓஓ…
தேனில் ஊறவைத்த செந்தமிழை காதில் சொல்லுவேன்… ஓஓ…
ஏழு ஸ்வரங்களிலே துள்ளிவரும் ராகம் அள்ளுவேன்… ஓஓ…
மூங்கில் துளைகளிலே என் மூச்சை தூது விடுவேன்… ஓஓ…

பெண் : வெண்ணிலா வெண்ணிலா தரையிறங்க மேடை அமைப்பேன்…
உன்னையே எண்ணியே நெஞ்சுருகி நாளும் உறைந்தேன்…

பெண் : தாலாட்டு நீ பாட தனியாக நான் கேட்க…
நானாக தவம் இருப்பேன்…

பெண் : கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…
கலை மானின் தோலழகே தமிழ் கம்பனின் பாட்டழகே…

பெண் : குயில் ஒன்னு நான் தரவா பாட்டோட நீ தூங்க…
மயில் ஒன்னு நான் தரவா தோகை மேலே நீ தூங்க…

பெண் : மடிமேலே தாலாட்ட மகராணி வருவாளே…
தோள் மேலே சீராட்ட தென்றல் இவள் தருவாளே…

பெண் : கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…

BGM


Notes : Kannazhage Song Lyrics in Tamil. This Song from Kannaal Pesavaa (2000). Song Lyrics penned by Raj Khanna. கண்ணழகே கண்ணழகே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top