பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ராஜ் கண்ணா | சுஜாதா மோகன் | தேவா | கண்ணால் பேசவா |
Kannazhage Song Lyrics in Tamil
பெண் : தன்னன்னானே தன்னேனானே…
தன்னன்னானே தன்னேனானே…
தானேனானே தானனனே தானேனானே தானனனே…
பெண் : கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…
கலை மானின் தோலழகே தமிழ் கம்பனின் பாட்டழகே…
பெண் : குயில் ஒன்னு நான் தரவா பாட்டோடு நீ தூங்க…
மயில் ஒன்னு நான் தரவா தோகை மேலே நீ தூங்க…
பெண் : மடிமேலே தாலாட்ட மகராணி வருவாளே…
தோள் மேலே சீராட்ட தென்றல் இவள் தருவாளே…
பெண் : கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…
—BGM—
பெண் : கோடை வெயிலினிலே குடைபிடித்துக் காத்திருப்பேன்… ஓஓ…
கொட்டும் மழையினிலே கண்ணிமைக்குள் உனை வைத்தேன்… ஓஓ…
வெள்ளி நிலவென்று கவி வடித்து சொன்னேனே… ஓஓ…
தூரம் நீ செல்ல மனம் துடித்து தவித்தேனே… ஓஓ…
பெண் : நெஞ்சமே நெஞ்சமே தினம் உயிரில் கலந்து மகிழ்வேன்…
ஜீவனே ஜீவனே மனம் திறந்து வாழ அழைத்தேன்…
பெண் : தாலாட்டு நான் பாட தனியாக நீ கேட்க…
நானாக தவம் இருப்பேன்…
பெண் : கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…
—BGM—
பெண் : வானம்பாடியாக மெட்டு சொல்லி கானம் எடுப்பேன்… ஓஓ…
தேனில் ஊறவைத்த செந்தமிழை காதில் சொல்லுவேன்… ஓஓ…
ஏழு ஸ்வரங்களிலே துள்ளிவரும் ராகம் அள்ளுவேன்… ஓஓ…
மூங்கில் துளைகளிலே என் மூச்சை தூது விடுவேன்… ஓஓ…
பெண் : வெண்ணிலா வெண்ணிலா தரையிறங்க மேடை அமைப்பேன்…
உன்னையே எண்ணியே நெஞ்சுருகி நாளும் உறைந்தேன்…
பெண் : தாலாட்டு நீ பாட தனியாக நான் கேட்க…
நானாக தவம் இருப்பேன்…
பெண் : கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…
கலை மானின் தோலழகே தமிழ் கம்பனின் பாட்டழகே…
பெண் : குயில் ஒன்னு நான் தரவா பாட்டோட நீ தூங்க…
மயில் ஒன்னு நான் தரவா தோகை மேலே நீ தூங்க…
பெண் : மடிமேலே தாலாட்ட மகராணி வருவாளே…
தோள் மேலே சீராட்ட தென்றல் இவள் தருவாளே…
பெண் : கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…
—BGM—
Notes : Kannazhage Song Lyrics in Tamil. This Song from Kannaal Pesavaa (2000). Song Lyrics penned by Raj Khanna. கண்ணழகே கண்ணழகே பாடல் வரிகள்.