பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி | இளையராஜா | ஆத்மா |
Kannale Kadhal Kavithai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக…
பெண் : கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக…
ஆண் : கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்…
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே…
பெண் : கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக…
ஆண் : கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக…
—BGM—
பெண் : கடற்கரை தன்னில் நீயும் நானும் உலவும் பொழுது…
ஆண் : பறவையை போல் கானம் பாடி பறக்கும் மனது…
பெண் : இங்கு பாய்வது புது வெள்ளமே…
இணை சேர்ந்தது இரு உள்ளமே…
ஆண் : குளிர் வாடை தான் செந்தளிரிலே…
இந்த வாலிபம் தன் துணையிலே…
பெண் : இளம் மேனி உன் வசமோ…
ஆண் : கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக…
பெண் : கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக…
—BGM—
பெண் : உனக்கென மணி வாசல் போலே…
மனதை திறந்தேன்…
ஆண் : மனதிற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி…
உலகை மறந்தேன்…
பெண் : வலையோசைகள் உன் வரவைக் கண்டு…
இசை கூட்டிடும் என் தலைவன் என்று…
ஆண் : நெடுங் காலங்கள் நம் உறவை கண்டு…
நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு…
பெண் : இன்ப ஊர்வலம் இதுவோ…
ஆண் : கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக…
பெண் : கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக…
ஆண் : கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்…
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே…
பெண் : கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக…
ஆண் : கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக…
Notes : Kannale Kadhal Kavithai Song Lyrics in Tamil. This Song from Athma (1993). Song Lyrics penned by Vaali. கண்ணாலே காதல் கவிதை பாடல் வரிகள்.