கண்ணாலே காதல் கவிதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாஆத்மா

Kannale Kadhal Kavithai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக…
பெண் : கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக…

ஆண் : கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்…
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே…

பெண் : கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக…
ஆண் : கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக…

BGM

பெண் : கடற்கரை தன்னில் நீயும் நானும் உலவும் பொழுது…
ஆண் : பறவையை போல் கானம் பாடி பறக்கும் மனது…

பெண் : இங்கு பாய்வது புது வெள்ளமே…
இணை சேர்ந்தது இரு உள்ளமே…

ஆண் : குளிர் வாடை தான் செந்தளிரிலே…
இந்த வாலிபம் தன் துணையிலே…

பெண் : இளம் மேனி உன் வசமோ…

ஆண் : கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக…
பெண் : கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக…

BGM

பெண் : உனக்கென மணி வாசல் போலே…
மனதை திறந்தேன்…

ஆண் : மனதிற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி…
உலகை மறந்தேன்…

பெண் : வலையோசைகள் உன் வரவைக் கண்டு…
இசை கூட்டிடும் என் தலைவன் என்று…

ஆண் : நெடுங் காலங்கள் நம் உறவை கண்டு…
நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு…

பெண் : இன்ப ஊர்வலம் இதுவோ…

ஆண் : கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக…
பெண் : கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக…

ஆண் : கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்…
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே…

பெண் : கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக…
ஆண் : கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக…


Notes : Kannale Kadhal Kavithai Song Lyrics in Tamil. This Song from Athma (1993). Song Lyrics penned by Vaali. கண்ணாலே காதல் கவிதை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top