| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| முத்தமிழ் | சித் ஸ்ரீராம் | சந்தோஷ் நாராயணன் | சர்வர் சுந்தரம் (2017) |
Kannaal Modhadhey Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்ணால் மோதாதே அழகியே…
நான் சொன்னால் தீராதே…
உன்னால் கூழாக உருகவே…
என் நெஞ்சே ஆறாதே…
ஆண் : கனவின் விதை நட்டிட்டாய்…
கவிதைகளை கற்பித்தாய்…
முகமும் அகமும் ஒன்றிங்கே…
நீ என் உள்ளே வீசும் சாரலே…
ஆண் : இசை ஒப்பித்தாய்…
இளமைகளை கொட்டிடாய்…
பசியும் ருசியும் ஒட்டிதான்…
காதலிலே நானும் பாதித்தேன்…
ஆண் : ரதியே மதியே ஒளியே…
முன் தேடிவந்து சூடிக் கொள்ளும்…
கோடி மின்னலே…
ஆண் : சஞ்சனா சகியே உயிரே இதமே…
உன்னாலே நாளும்தான்…
மூளை மீது விரல்தானே… ஓ…
—BGM—
ஆண் : பொன் ஆடை போலே உடலிலே…
அடி என் தோளில் நீயே…
ஆண் : சிறகும் விரிய வந்தாய்…
உறவில் உதயம் தந்தாய்…
தனியே தனிமை கொன்றிங்கே…
தாகம் தந்தே யோகம் போதித்தாய்…
ஆண் : அசையும் அழகைக் கண்டேன்…
அறிவின் வளமை கண்டேன்…
துணிவின் வலிமை கொண்டிங்கே…
தோற்கின்றேனே மீண்டும் மீண்டும்தான்…
ஆண் : ரதியே மதியே ஒளியே…
முன் தேடிவந்து சூடிக் கொள்ளும்…
கோடி மின்னலே…
ஆண் : சஞ்சனா சகியே உயிரே இதமே…
உன்னாலே நாளும்தான்…
மூளை மீது விரல்தானே…
—BGM—
ஆண் : ஆறடி நிலமே நான்தான்…
மானிட மழையே வா வா…
வானிடம் வரவா…
தீயால் ஆவி ஆகிறேன்…
ஆண் : நாள் தோறும் தாலாட்ட…
காதருகே பாராட்ட…
மோகத்தில் சீராட்ட…
மாறாமல் நீ வேண்டும்…
ஆண் : மாயத்தில் மாய்ந்தேனே…
மல மலவென தேய்ந்தேனே…
ஒரு முத்தம் கேட்டேனே…
அதை பெற்றால் வாழ்வேன் நானே…
ஆண் : ரதியே மதியே ஒளியே…
முன் தேடிவந்து சூடிக் கொள்ளும்…
கோடி மின்னலே…
ஆண் : சஞ்சனா சகியே உயிரே இதமே…
உன்னாலே நாளும்தான்…
மூளை மீது விரல்தானே… ஓ…
ஆண் : கண்ணால் மோதாதே அழகியே…
நான் சொன்னால் தீராதே…
உன்னால் கூழாக உருகவே…
என் நெஞ்சே ஆறாதே… ஓஹோ…
ஆண் : இசை ஒப்பித்தாய்…
இளமைகளை கொட்டிடாய்…
பசியும் ருசியும் ஒட்டிதான்…
காதலிலே நானும் பாதித்தேன்…
ஆண் : ரதியே மதியே ஒளியே…
முன் தேடிவந்து சூடிக் கொள்ளும்…
கோடி மின்னலே…
ஆண் : சஞ்சனா சகியே உயிரே இதமே…
உன்னாலே நாளும்தான்…
மூளை மீது விரல்தானே…
ஆண் : அழகே அழகே… அமுதே அமுதே…
சகியே சகியே…
Notes : Kannaal Modhadhey Song Lyrics in Tamil. This Song from Server Sundaram (2017). Song Lyrics penned by Muthamil. கண்ணால் மோதாதே பாடல் வரிகள்.
