| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| நா. முத்துக்குமார் | கார்த்திக் | யுவன் ஷங்கர் ராஜா | 7ஜி ரெயின்போ காலனி |
Kan Pesum Varthaigal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை…
காத்திருந்தால் பெண் கனிவதில்லை…
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய…
கண்ணாடி இதயம் இல்லை…
கடல் கை மூடி மறைவதில்லை…
கண்ணாடி இதயம் இல்லை…
கடல் கை மூடி மறைவதில்லை…
ஆண் : காற்றில் இலைகள் பறந்த பிறகும்…
கிளையின் தழும்புகள் அழிவதில்லை…
காயம் நூறு கண்ட பிறகும்…
உன்னை உள் மனம் மறப்பதில்லை…
ஆண் : ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்…
வருகிற வழி அவள் அறிவதில்லை…
கனவினிலும் தினம் நினைவினிலும்…
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை…
—BGM—
ஆண் : கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை…
காத்திருந்தால் பெண் கனிவதில்லை…
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய…
கண்ணாடி இதயம் இல்லை…
கடல் கை மூடி மறைவதில்லை…
—BGM—
ஆண் : காட்டிலே காயும் நிலவு…
கண்டு கொள்ள யாருமில்லை…
கண்களின் அனுமதி வாங்கி…
காதலும் இங்கே வருவதில்லை…
ஆண் : தூரத்தில் தெரியும் வெளிச்சம்…
பாதைக்கு சொந்தம் இல்லை…
மின்னலின் ஒளியை பிடிக்க…
மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை…
ஆண் : விழி உனக்கு சொந்தமடி…
வேதனைகள் எனக்கு சொந்தமடி…
அலை கடலை கண்ட பின்னே…
நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி…
ஆண் : கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை…
காத்திருந்தால் பெண் கனிவதில்லை…
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய…
கண்ணாடி இதயம் இல்லை…
கடல் கை மூடி மறைவதில்லை…
—BGM—
ஆண் : உலகத்தில் எத்தனை பெண் உள்ளது…
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது…
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது…
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது…
ஆண் : பனி துளி வந்து மோதியதால்…
இந்த முள்ளும் இங்கே துண்டானது…
பூமியில் உள்ள பொய்கள் எல்லாம்…
அட புடவை கட்டி பெண் ஆனது…
ஆண் : ஏ புயல் அடித்தால் மழை இருக்கும்…
மரங்களும் பூக்களும் மறைந்து விடும்…
சிரிப்பு வரும் அழுகை வரும்…
காதலில் இரண்டுமே கலந்து வரும்…
ஆண் : ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்…
வருகிற வழி அவள் அறிவதில்லை…
கனவினிலும் தினம் நினைவினிலும்…
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை…
ஆண் : ஹே… கண் பேசும்…
ஆண் : ஹே… கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை…
காத்திருந்தால் பெண் கனிவதில்லை…
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய…
கண்ணாடி இதயம் இல்லை…
கடல் கை மூடி மறைவதில்லை…
ஆண் : காற்றில் இலைகள் பறந்த பிறகும்…
கிளையின் தழும்புகள் அழிவதில்லை…
காயம் நூறு கண்ட பிறகும்…
உன்னை உள் மனம் மறப்பதில்லை…
—BGM—
Notes : Kan Pesum Varthaigal Song Lyrics in Tamil. This Song from 7G Rainbow Colony (2004). Song Lyrics penned by Na. Muthukumar. கண் பேசும் வார்த்தைகள் பாடல் வரிகள்.

