பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஹரிசரண் & என்.எஸ்.கே. ரம்யா | இளையராஜா | மேகா |
Kalvane Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…
கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…
ஆண் : பேசும் நிலவே நான் உன்னோடு பேசா கதையா…
எந்தன் வீடெங்கும் இன்றேனோ வீசா ஒளியா…
மெளனமாய் நான் பேச நீ பேச நாம் பேச…
பெண் : கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…
தனானா நானா நானா னா னா…
தனானா நானா நானா னா னா…
—BGM—
ஆண் : காதலாகி காற்றிலாடும் மேகமானேனே…
விண்ணோடு சென்றேனே… ஹோஹோ…
தூறலாகி உன்னைத் தீண்ட தாகம் கொண்டேனே…
உன் கையில் வந்தேனே…
பெண் : வேறாரும் போகாத பூமி…
காணாத வானம்…
போகாத பூமி காணாத வானம்…
கைகோர்த்து சென்று நாம் காண வேண்டும்…
ஆண் : காதலால் காலங்கள் இங்கே நின்றே போகும்…
பெண் : கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…
—BGM—
பெண் : தூறும் போது வானவில்லில் என்ன வண்ணங்கள்…
நெஞ்சோடு கொஞ்சாதோ…
வேறு வேறு பார்வையென்றும் வீசியே சென்றாய்…
மின்சாரம் எங்கெங்கும்…
ஆண் : தாங்காத தீ மூட்டும் பார்வை…
போர் மூட்டும் வேளை…
தீ மூட்டும் பார்வை போர் மூட்டும் வேளை…
தீராத தாகம் கொண்டாளே பாவை…
பெண் : ஆயிரம் பேசலாம் ஆயினும் மெளனம் மெளனம்…
ஆண் : கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்…
கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்…
ஆண் : பேசும் நிலவே நான் உன்னோடு பேசா கதையா…
எந்தன் வீடெங்கும் இன்றேனோ வீசா ஒளியா…
மெளனமாய் நான் பேச நீ பேச நாம் பேச…
—BGM—
ஆண் : கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்…
தனானா நானா நானா னா னா…
தனானா நானா நானா னா னா…
Notes : Kalvane Song Lyrics in Tamil. This Song from Megha (2014). Song Lyrics penned by Na. Muthukumar. கள்வனே கள்வனே பாடல் வரிகள்.