பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | யுவன் ஷங்கர் ராஜா & என்.எஸ்.கே. ரம்யா | இளையராஜா | மேகா |
Chellam Song Lyrics in Tamil
ஆண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…
ஆண் : விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்…
உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்…
ஆண் : மேகம் மேகத்தோடு கொஞ்சி…
பேசும் ஓசை கேட்கலாமா…
அந்த வெண்ணிலவின் மடியில்…
காதல் கதைகள் கேட்கலாமா…
தூங்கி பார்க்கலாம்… ஆஆ…
பெண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…
கொஞ்சம் வாடா அள்ளி தாடா…
—BGM—
ஆண் : பூக்கள் உதிர்கின்ற நிழல் சாலையில்…
நெஞ்சம் உன்னோடு நீந்தும்…
காதல் பரிசாக மழை பூக்களை…
கைகள் உனக்காக ஏந்தும்…
பெண் : என் கண்கள் பார்த்துக்கொண்டே…
நீ உளறும் உளறல் எல்லாம்…
ஒரு கவிதை ஆனதென்ன…
நீ கவிஞன் ஆனதென்ன…
ஆண் : எந்தன் காதல் தேவதை நீ…
உந்தன் சிறகில் என்னை மூடு…
எந்தன் மூச்சு குழலுக்குள்ளே…
வந்து இரவில் ராகம் பாடு…
என்னில் உன்னை தேடு…
பெண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…
—BGM—
பெண் : காலையின் பனி போல உன் நியாபகம்…
என்னை சில்லென்று தீண்டும்…
ஆண் : ஹே… மாலை வெயில் வந்து என் மார்பிலே…
உந்தன் விரல் கொண்டு சீண்டும்…
பெண் : என் கனவின் அழகு எல்லாம்…
நீ அள்ளி வந்ததென்ன…
ஆண் : என் காதல் மொழிகள் எல்லாம்…
நீ சொல்லி தந்ததென்ன…
பெண் : இங்கு வீசும் காற்று எல்லாம்…
உந்தன் வாசம் வீச வேண்டும்…
போகும் வின்னின் வண்ணம் அள்ளி…
உந்தன் நெஞ்சில் பூச வேண்டும்…
கண்கள் கூச வேண்டும்…
ஆண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…
பெண் : விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்…
உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்…
ஆண் & பெண் : மேகம் மேகத்தோடு கொஞ்சி…
பேசும் ஓசை கேட்கலாமா…
அந்த வெண்ணிலவின் மடியில்…
காதல் கதைகள் கேட்கலாமா…
தூங்கி பார்க்கலாம்… ஆஆ…
பெண் : செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…
கொஞ்சம் வாடா அள்ளி தாடா…
Notes : Chellam Song Lyrics in Tamil. This Song from Megha (2014). Song Lyrics penned by Na. Muthukumar. செல்லம் கொஞ்சும் பூவே பாடல் வரிகள்.