பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | ஹரிஹரன் | ஹிமேஷ் ரேஷ்மியா | தசாவதாரம் |
Kallaimattum Kandal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஓம் நமோ நாராயணாய…
—BGM—
ஆண் : கல்லை மட்டும் கண்டால்…
கடவுள் தெரியாது…
கடவுள் மட்டும் கண்டால்…
கல்லடி தெரியாது…
ஆண் : கல்லை மட்டும் கண்டால்…
கடவுள் தெரியாது…
கடவுள் மட்டும் கண்டால்…
கல்லடி தெரியாது…
ஆண் : எட்டில் ஐந்து எண் கழியும்…
என்றும் ஐந்தில் எட்டு ஏன் கழியாது…
அஷ்ட அக்சரம் ஏற்கும் நெஞ்சு…
பஞ்ச அக்சரம் பார்க்காது…
ஆண் : ஊனக் கண்ணில் பார்த்தால்…
யாவும் குற்றம்தான்…
ஞானக் கண்ணில் பார்த்தால்…
யாரும் சுற்றம்தான்…
—BGM—
ஆண் : இல்லை என்று சொன்ன பின்பும்…
இன்றியமையாது…
தொல்லை தந்த போதும் எங்கள்…
தில்லை மாறாது…
குழு : இல்லை என்று சொன்ன பின்பும்…
இன்றியமையாது…
தொல்லை தந்த போதும் எங்கள்…
தில்லை மாறாது…
ஆண் : வீர சைவர்கள் முன்னால் எங்கள்…
வீர வைணவம் தோற்காது…
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்…
மேற்கில் சூரியன் உதிக்காது…
ஆண் : ராஜலெட்சுமி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்…
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன்…
நான் நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜதா்தான்…
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்…
—BGM—
ஆண் : நீருக்குள்ளே மூழ்கினாலும்…
நீதி சாகாது…
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள்…
ஜோதி சாகாது…
குழு : நீருக்குள்ளே மூழ்கினாலும்…
நீதி சாகாது…
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள்…
ஜோதி சாகாது…
ஆண் : வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்…
வெண்ணிலாவை அது அணைத்திடுமா…
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்…
அந்த வானம்தன்னை அது நனைத்திடுமா…
ஆண் : சைவம் என்று பார்த்தால்…
தெய்வம் தெரியாது…
தெய்வம் என்று பார்த்தால்…
சமயம் கிடையாது…
ஆண் : கல்லை மட்டும் கண்டால்…
கடவுள் தெரியாது…
கடவுள் மட்டும் கண்டால்…
கல்லடி தெரியாது…
—BGM—
Notes : Kallaimattum Kandal Song Lyrics in Tamil. This Song from Dhasaavathaaram (2008). Song Lyrics penned by Vaali. கல்லை மட்டும் கண்டால் பாடல் வரிகள்.