பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மதன் கார்க்கி | நிவாஸ் & சஞ்சனா கல்மஞ்சே | எஸ்.எஸ். தமன் | தில்லுக்கு துட்டு |
Kaanamal Pona Kadhal Song Lyrics in Tamil
ஆண் : ஹேய்… காணாமல் போனக் காதல்…
காலங்கள் போனப் பின்னே…
தானாக எந்தன் முன்னே வந்ததோ…
பெண் : ஹோஹோ… சொல்லாமல் முத்தம் ஒன்றை…
பொல்லாத நேரம் ஒன்றில்…
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ…
—BGM—
ஆண் : ஹேய்… காணாமல் போனக் காதல்…
காலங்கள் போனப் பின்னே…
தானாக எந்தன் முன்னே வந்ததோ…
பெண் : ஹோஹோ… சொல்லாமல் முத்தம் ஒன்றை…
பொல்லாத நேரம் ஒன்றில்…
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ…
ஆண் : ஹேய்… என் பள்ளிக்குயிலே…
என் இன்பத் துயிலே…
என்னை ஏன் நீங்கி எங்கே போனாய் உறவே…
பெண் : என் செல்லப் புலியே…
என் நெஞ்சின் மொழியே…
இனி நான் நீங்கமாட்டேன் நீ என் விழியே…
ஆண் : ஹேய்… காணாமல் போனக் காதல்…
காலங்கள் போனப் பின்னே…
தானாக எந்தன் முன்னே வந்ததோ…
பெண் : ஹோஹோ சொல்லாமல் முத்தம் ஒன்றை…
பொல்லாத நேரம் ஒன்றில்…
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ…
—BGM—
ஆண் : ஹேய்… நடமாடும் தூக்கம் ஒன்றில்…
கனவாக உன்னைக் கண்டேன்…
புரியாமல் நான் நிற்க்கின்றேன் அன்பே உன்னாலே…
பெண் : ஹேய்… கனவோடு முத்தம் என்றால்…
இதழோடு ஈரம் ஏனோ…
அடைக்காதே அதை மீண்டும் நான் தந்தேன் தன்னாலே…
ஆண் : தூவானத் துகளே…
விண் மீனின் மகளே…
எந்தன் கையோடு விழுந்தாய் செவ்வாய் மலரே…
பெண் : ஆண்பாலின் அழகே…
நீ வந்தப் பிறகே…
எந்தன் நெஞ்சோடு நானும் கொண்டேன் சிறகே… ஏ…
—BGM—
ஆண் : ஹேய்… வாயில் வாயை ஒத்தியே…
என் கண்கள் ரெண்டை தொட்டியே…
என் நெஞ்சைக் குடித்தாலோ… ஹோ…
ஆண் : ஹேய்… பூக்கள் கொண்டே மோதியே…
நான் ஆனேன் ஆயுள் கைதியே…
எனை சிறையில் அடைத்தாளோ… ஹோ…
ஆண் : ஹேய்… காணாமல் போனக் காதல்…
காலங்கள் போனப் பின்னே…
தானாக எந்தன் முன்னே வந்ததோ…
வந்ததோ… வந்ததோ… வந்ததோ…
Notes : Kaanamal Pona Kadhal Song Lyrics in Tamil. This Song from Dhilluku Dhuddu (2016). Song Lyrics penned by Madhan Karky. காணாமல் போன பாடல் வரிகள்.