காதல் ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஆலப் ராஜு, ஹேமச்சந்திரன் & சுனிதா சாரதிஹாரிஸ் ஜெயராஜ்ஒரு கல் ஒரு கண்ணாடி

Kaadhal Oru Song Lyrics in Tamil


ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…

BGM

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

ஆண் : சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு…
காணாமல் போனால் கண்ணாலே தேடு…

ஆண் : ஏமாற்ற பார்க்கும் பல முறை…
என்றாலும் மாட்டும் ஒரு முறை…
எங்கேதான் போகும் அது வரை…
போடா நீ காதல் வரும் வரை…

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

BGM

ஆண் : நீ என்னை பார்க்கும் குதுகலத்தில்…
நான் உன்னை பார்ப்பேன் பரவசத்தில்…
மழை பொழியாதோ நெஞ்சம் நினையாதோ…
மன கடலுக்குள்ளே அலை அடிக்காதோ…

ஆண் : மனதை சொல்ல வந்த நேரத்தில்…
என் நெஞ்சை கட்டினால் ஆடை கம்பத்தில்…
குளிர் பார்வை வந்து என்னை அணைகாதோ…
அந்த அணைப்பினிலே உயிர் பிழைக்காதோ…

ஆண் : மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன்…
ஆனாலும் பெண்ணே விரும்பிதான் தொட்டேன்…
கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன்…
இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பாத்து நின்றேனே…

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

BGM

ஆண் : தொண்டைக்குள் சிக்குதே ஒரு வார்த்தை…
சொல்லாமல் போகுதே என் வாழ்க்கை…
உன்னை தொட வந்தேன் நான் தீண்டவில்லை…
மஞ்சள் கோட்டை விட்டு கால் தாண்டவில்லை…

ஆண் : பன்னீரை தூவுதே ஒரு பார்வை…
விண்மீனை தூவுதே மறு பார்வை…
இந்த இடைவெளிகள் ஏன் குறைய வில்லை…
உன் கடை விழியில் ஏன் கருணை இல்லை…

ஆண் : கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன்…
கரும் பாறை மீது மழையாக பெய்தேன்…
பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன்…
பல கல்லை வீசி பார்த்தும் உடையாத கண்ணாடி…

குழு : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

ஆண் : சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு…
காணாமல் போனால் கண்ணாலே தேடு…

ஆண் : ஏமாற்ற பார்க்கும் பல முறை…
என்றாலும் மாட்டும் ஒரு முறை…
எங்கே தான் போகும் அது வரை…
போடா நீ காதல் வரும் வரை…

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…


Notes : Kaadhal Oru Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் ஒரு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top